மதுரை வாலைசாமி

ஞானக் கும்மி

காப்பு

1. சீர்மேவு ஞான வடிவான பர
தேசிகன் சற்குரு தன்னருளாற்
பார்மீதில் ஞானக் கும்மி பாடசிவ
பாலன் கணபதி காப்பாமே.

2. அம்பிகை வாலை பதம் போற்றி - அருள்
ஆனந்தக் கும்மித் தமிழ்பாடத்
தும்பி முகனுக் கிளையவ னாஞ்சிவ
சுப்பிர மண்யனுங் காப்பாமே.

3. நாலாம் வேதமு மோராறும்-வெகு
நாநா பேதமாய் நின்றானை
மேலாய்ப் போற்றிக் கும்மி பாடச்-செந்தில்
வேலவன் தன்பதங் காப்பாமே.

4. பாரி லுயர்மது ராபுரியில்-வாலை
சாமிசொல் லுங்கும்மிப் பாடலுக்கு
மேரு வதனடி மூலமுக் கோண
விநாயகன் தன்பதங் காப்பாமே.

5. ஆதியும் அந்தமும் ஒன்றாகி -வளர்
அண்டபின் டம்மு மிரண்டாகிச்
சாதி பலபல வேறாகி நின்று
தத்துவங் கேளடி ஞானப்பெண்ணே!

6. தேகமா னதோர் மலபாண்டம்-அதிற்
சிற்பணம் வந்திடு முற்பணத்தை
யோக மெனுந் தமிழ்ப்பாடலுக்கு-மனம்
உவந்து கேளடி ஞானப்பெண்ணே!

7. ஏகப் பெருவெளி பட்டணமாம்-அதில்
எவனோ சித்த னொருவனுண்டாம்-அந்த
வாச னிலைபேசா வாயுமில்லை-அந்த
மாப்பிள்ளை பெண்ணென்று ஞானப்பெண்ணே

8. சாட்சி யெனும்பிர மன்பிள்ளைக்கு மூலச்
சத்தியென்ற வொரு பெண்ணாச்சு:
சூட்சும காரண மிரண்டினுக் குநிலை
தூலநா மென்கிறாள் ஞானப்பெண்ணே!

9. ஊமையன் என்றே அறிந்துகொண்டாள் அந்த
ஊமைபேச் செல்லாமே நாமென்கிறாள்:
சீமையை ஆளத் துசங் கட்டினாள் அந்தச்
சீமாட்டி தானடி ஞானப்பெண்ணே!

10. பெண்ணர சானதி ரத்தின மாமதைப்
பெண்ணென்று சொல்லவுங் கேள்வியுண்டோ?
மண்ணையும் விண்ணையுங் கூட்டிப் பயிர்செய்த
மார்க்கத்தைக் கேளடி ஞானப்பெண்ணே!

11. பட்டணங் கட்டி மகராசி துரை
பாங்குடன் செய்த அதிகாரச்
சட்டமுஞ் சொல்லத் தொலையாதே விதைச்
சற்றே கேளடி ஞானப்பெண்ணே!

12. அஞ்சூர் அஞ்சூர் வகுப்பாச் சாமம் அதில்
அஞ்சூர் அஞ்சு பிரிவாச்சாம்;
அஞ்சூ ருக்கொரு வித்தாச் சாமம் அதற்
கான குளமுண்டு ஞானப்பெண்ணே!

13. ஊரை யடுத்து மலையுமுண் டாம் அதற்
குள்ளாயிருந்த நிலைக்காரர்
பேரை யுரைக்க இனிக்கே ளுமவர்
பெருமைதா னென்னடி ஞானப்பெண்ணே!

14. தலைமன் னாரிலி ருப்பவ ராமந்தச்
சட்டையப் பிள்ளையும் நெட்டையராம்
நிலமூ மான்யமு மென்னவன் றாளந்த
நிசந்தெ ரியுமோ ஞானப்பெண்ணே!

15. கும்பகோ ணத்திலே அப்புப்பிள் ளையவர்
கூட்டமற் றால்வெகு வாட்டமென்று
செம்பாதிப் பங்குதான் கேட்டுவந் தால்நியாயந்
தெளிவ தெப்படி ஞானப்பெண்ணே!

16. மூலக் குடிவன்னித் தேவரை வரவர்
மூர்க்கமுந் தீர்க்கவு மார்க்கமுண்டோ?
நாலு கரைப்பங்கு நாமென்கி றாரிந்த
ஞாயந் தெரியுமோ ஞானப்பெண்ணே!

17. காத்தவ ராய கவுண்டனுக்குத் திசைக்
காவலும் மற்ற விசாரணையும்
பார்த்து வருவது நாமென்கி றாரிந்தப்
படிநி லைக்குமோ ஞானப்பெண்ணே!

18. ஆகாய மான பரஞ்சோ தியவர்
அஞ்சுக் கரைப்பங்கும் தனக்குள்ளே
சேகர மாமென்றுஞ் சொல்லுகி றாரிந்தச்
சேதியை கேளடி ஞானப்பெண்ணே!

19. அம்பலக் காரரும் மூன்றுபே ராம் பின்னும்
அந்தக னாட்டுக் கணக்கனெ ன்றாம்:
வம்புசெய் தாலந்த முன்னா ளனுப்படி
வகைதெ ரியுமே! ஞானப்பெண்ணே!

20. ஒன்பது கூத்தரும் பங்காளி எந்த
ஊருக்கு ளூர்களும் அப்படியாம்;
ஐம்பது சேருவைக் காரருக் குமவன்
அண்ண னொருவனாம் ஞானப்பெண்ணே!

21. கோயிற் குருக்க ளொருபார்ப் பான்தெப்பக்
குளத்தின் மேலே யவன்வீடு.
தாவிக் கொண் டுதொடை தட்டுகி றானிலஞ்
சாருமோ கேளடி ஞானப் பெண்ணே!

22. செட்டி யொருவனாம் பங்கா ளிஅதிற்
சேர்ந்தவனாக மிக வோங்கிக்
கட்டி வராகனைக் கொண்டு வந்தால் காணி
யாட்சி செல்லுமோ ஞானப்பெண்ணே!

23. காரியக் காரரோ அஞ்சுபே ராமவர்
காரியம் பார்க்க வீரஞ்சு பேராம்;
மாரீசக் காரர்: சமாதிக்கண் மூன்றுபேர்
வார்த்தையைக் கேளடி ஞானப்பெண்ணே!

24. ஊழியக் காரர் அநேகருண் டாமவர்க்
கும்பளஞ் சம்பளம் நிரம்பவுண்டாம்:
பாளையங் கோட்டைக்குச் சாரிவைத் தாலிவர்
பதுங்குவாரடி ஞானப்பெண்ணே!

25. பாழூ ருக்கொரு மேல்மணி யாமவன்
பார்த்தாற் சின்னப் பயல் காணும்
வேளூ ரானரைப் பங்குத் தனமுதல்
விற்றுக் கொடுக்கிறான் ஞானப்பெண்ணே!

26. ஆராறு குடியு முண்டா கும்மதில்
அந்நியக் குடிமுப்பத் தைந்து முண்டாம்:
ஓராறு பத்துக் குடிதனி லேயஃது
ஒட்டுக் குடியடி ஞானப்பெண்ணே!

27. இத்தனை பேரு மிருந்தா லும்மதில்
இரண்டே பேர்கள் சமுசாரி:
அத்தனை பேரையுந் தள்ளிவைத் தாற்பயிர்
ஆரிடு வாரடி ஞானப்பெண்ணே!

28. ஒற்றேர் ஒன்றை எருதா கும்மதில்
ஒன்று பரம்புமுச் சாலடிக்கும்;
கற்றுடன் காரணங்கண்டா யோஞானக்
கண் கொண்டு பாரடி ஞானப் பெண்ணே!

29.  இரண்டு கரைக்குடி மானிய மாமதில்
இட்ட விதையொட்டி ரட்டியுண்டாம்;
பண்டு பழகின மேன்புள்ளிக் காரனும்
பார்த்துப் போயினான் ஞானப்பெண்ணே!

30. புள்ளிக் குறைச்சலும் வாரா மல்முன்னே
போட்ட பலனுங்கை யாடாமற்
கொள்ளையிடச் சொல்லி ஒலைவந் தாலிது
கொடுமை சொல்லடி ஞானப்பெண்ணே!

31. வந்த விதியென்றி ருந்தா லும்வசக்
கட்டு நிலுவையுங் கேட்கிறானே
இந்த மகிமை யவன்றா னோவிதற்
கென்ன சுகமடி ஞானப்பெண்ணே!

32. தரிசுக் கிடக்கிற பெட்டியி லேயேறித்
தண்ணீர் பாய்ச்சவுஞ் சொல்லுகிறான்;
வரி கொடுக்கிற தில்லையென் றாற்பூசை
மாட்டுகி றானடி ஞானப்பெண்ணே!

33. ஊரிற் குடியதி ருக்கவொட் டானிருந்
தூழியஞ் செய்யவும் வேலையிட்டான்;
தீரமில்லை யென்று சொன்னா லுமவன்
தெண்டம் பிடிக்கிறான் ஞானப்பெண்ணே!

34. அந்த இருபத்தோ ராயிரத் திருநூற்
றுக்கல நெல்லுமே கண்டுமுதல்
வந்ததுண் டோவதில் மூன்றத் தொருபங்கு
வாரம் பிடித்தாண்டி ஞானப்பெண்ணே!

35. மிச்சமிருந்த நெல் லுத்தொகை யில்வாரம்
விண்ணுறுநோய் கொண்ட பேயனுடன்
அச்சுதன் சேயனுஞ் துங்கக்கோ னானுமாய்
அழித்துப் போட்டாரடி ஞானப்பெண்ணே!

36. நிலம் விளைந்ததுங் காணீ ரோவதிற்
செலவழிந்ததும் பாரீரோ?
அலமந்து திரி யாம லேயருள்
ஆனந்தஞ் சேரடி ஞானப்பெண்ணே!

37. எண்சா ணீள மொரு வீடாமதில்
எட்டொரு பீற்றல் மலக்கூடாம்:
பஞ்சாயக் காரரீ ரைந்துபே ருந்தெய்வப்
பதியி தென்கிறார் ஞானப்பெண்ணே!

38. தேக மென்னுஞ் சிவாலய மாமதிற்
சென்னி சிறுவாயிற் கோபுரமாம்.
காக மான விரண்டு கரக்கோடுங்
கையாங் கேளடி ஞானப்பெண்ணே!

39. உண்ணாக் கென்ற கொடி மரமாமதிற்
கோபுர சந்திர புட்கரணி
அண்ணாக் கென்றே வலப்புறத் திற்கண்ட
தக்கினி தீர்த்தமாம் ஞானப்பெண்ணே!

40. நாற்பத்து முக்கோண மண்டப மாம் அதன்
நடுவி ருக்குதாஞ் சிங்காரம்!
பார்ப்பது சக்கரக் கோட்டையிலே யிந்தப்
படியிருக்குதாம் ஞானப்பெண்ணே!

41. பீடமிருப்பது மையத்தி லேபலி
பீட மிருப்பதுங் குய்யத்திலே;
மாடமிருந்த சிவாலயத் தின்மணி
விளக்கி ருக்குது ஞானப்பெண்ணே!

42. இப்படி யான திருக்கோ விலதற்
கெப்படி வாயி லிருக்காதோ
அப்படி யென்று தெரியா மற்றெரிந்
தலைகி றாரடி ஞானப்பெண்ணே!

43. பூட்டைத் திறப்பதுங் கையாலே மனப்
பூட்டைத் திறப்பது மெய்யாலே;
வீட்டைத் திறக்க முடியாமல் விட்ட
வீதியி தென்கிறார் ஞானப்பெண்ணே!

44. வாசலிலே யொரு மேல்வா சலந்த
வாசலிலே சிறு வாசலுண்டு;
நேசமு டன்றிருவாசலிற் பூட்டு
நெருக்கம் பாரடி ஞானப்பெண்ணே!

45. அட்சர மாமௌ னாட்சர மாவது
ஆனால் நல்ல திறவு கோலாம்;
உச்சிதமாகத் திறந்தா லேயந்த
உச்சிவழிகாணும் ஞானப்பெண்ணே!

46. கண்ணா லேமனக் கண்ணா லேயதைக்
கண்டாலே வழி யுண்டாகும்;
பெண்ணாசை தன்னை யடுக்கா மல்வழி
பேணிப் பாரடி ஞானப்பெண்ணே!

47. பார்த்து நடப்பது மேல்வா சலந்தப்
பாதையறிவது மெவ்வாறு?
மாத்திரை நேரம் பிரியா மற்பாதை
மார்க்கங் கேளடி ஞானப்பெண்ணே!

48. எருக்கி டந்த குழிதாண் டியதில்
இரண்டு விரற்கடை மேற்றாண்டிக்
கருக்கி டைக்கும் அடையாள மதைக்
கண்டு கேளடி ஞானப்பெண்ணே!

49. மாயன் அரண்மனை காணீ ரோவன்னி
மரமி ருப்பதுங் தோணீரோ?
நேய மதுகடந் தப்பா லேயறு
கோணப் படியடி ஞானப்பெண்ணே!

50. கோணத்தில் நின்று மயங்கா தேசுழிக்
காற்றை யடக்கிச் சிணுங்காதே;
வீணுக் கலைந்து தியங்காதே தூல
வேடத்தைத் தள்ளடி ஞானப்பெண்ணே!

51. தூலத்தை விட்டு விடாயா கிலதிற்
சூட்சத்தைக் காண முடியாது;
பாலத்திலேறி நடந்தக் காற்பெரும்
பாதையி தல்லவோ ஞானப்பெண்ணே!

52. பாதையான பெரும்பாதையைக் கிட்டிடப்
பட்டண முண்டொரு வட்டமதாய்;
நாதமுங் கீதமுங் கேட்குதடி தெய்வ
நாயகன் சந்நிதி ஞானப்பெண்ணே!

53 சந்நிதி யென்னடி கண்டதுண்டோ கண்டால்
தத்துவம் பேசத் திறமுமுண்டோ?
முன்னே முப்பாழுங் கடப்பதுண்டோ - அதில்
முச்சுடருண்டடி ஞானப்பெண்ணே!

54. முச்சுடர் வட்டமே சக்கர மாமது
மூக்கு நுனியிற் சுழுமுனையாம்;
அச்சுடர் வட்டத் திருந்தவ னேகுரு
ஆனந்த நந்தியாம் ஞானப்பெண்ணே!

55. நந்தியிருந்தது வன்னிவட் டம்மதில் நாட்டம் புருவமத் யான திட்டம்:
சந்திரனுங் கதிர்ச் சூரியனும் அந்தத் தலத்தில் நின்றனர் ஞானப்பெண்ணே!

56. நாதவிந்தல்லவோ நால்யோ னிதச நாதவிந் தல்லவோ எழுத்தோற்றம்?
நாதவிந்தால் உடலும் உயிரும்பரம் நந்தியைப் போற்றடி ஞானப்பெண்ணே!

57. விந்து இருந்த தலந்தனிலே குருநந்தி யிருந்தார் கொலுவாகி:
சிந்தை தெளிந்து மகாரம்வைத் தால் அந்தச் சீமானைக் காணலாம் ஞானப்பெண்ணே!

58. சீமான் கிட்ட அடுத்தக் கால்மேலைச் சீமை நமக்குக் குடியாச்சு;
ஆமா மென்று கும்மிப்பாடியருள் ஆனந்தஞ் சேரடி ஞானப்பெண்ணே!

59. ஆனந்தமான தலந்தானே அது அத்து விதமாந் தலந்தானே
தானந்தமான சதாசிவத்தைப் போற்றித் தாண்டிக் கும்மி அடியுங்கடி

60. ஞானமாம் ஆயிரத் தெட்டிதழ்ப் பீடம் நாட்டமாஞ் சந்திரனார் வீடு
மோனம் இருந்த மகார மவுனத்தை மூட்டிக் கும்மி அடியுங்கடி

61. குண்டலி வாசி யகாரம டிபிடர்க் கண்டமதிலே யுகாரமடி
உண்டு கழியின் மகாரம்வைத் தாற்சிவ லோகம் இதல்லவோ ஞானப்பெண்ணே!

62. ஒங்காரமான பிரணவத் தாள்எங்கும் உயர்ந்த சோம கலை நிறத்தாள்
ரீங்காரமான பராசக்தியை நீங்கள் நேர்ந்து கும்மியடியுங்கடி

63. பூரக முப்பத்திரண்டாகு மனப் பூரண கும்பம் இரட்டியதாம்
கூறவே ரேசகம் எண்ணிரண்டாம் அந்தக் குறிப் பறிந்துகொள் ஞானப்பெண்ணே!

64. பிங்கலை யாவதி ரேசகத் தைவளர் பூரகந் தன்னிடலத்தூதி
நங்கலை நந்தியிற் கும்பிக்கவே சிவ நாட்டம் இதல்லவோ ஞனாப்பெண்ணே!

65. அறிந்து கொள்ளு மெழுத்தோடே பவுரனை முதலமா வாசிமட்டும்
மறந்திடாமற் செய் மாத்திரை யின்படி வாசி வசமாகும் ஞானப்பெண்ணே!

66. காலாலே கனல் ஏற்றுங்கடி சுழி மேலே கொண்ட முதூட்டுங்கடி
மூலா தாரத் தலங்கேசர மென்று முழங்கிக் கும்மியடியுங்கடி.

67. சார்ந்து கொள்ளடி கேசரத்தை முதற்றன்னை யறியலாந் தானாகக்
கூர்ந்து மூலக் கணபதி பாதத்தைக் கும்பிட்டுக் கொள்ளடி ஞானப்பெண்ணே!

68. நவ்வெழுத்தே பிரமனாரா குமதில் நாரணன் மவ்வெழுத்தானானே:
சிவ்வெழுத்தே தெய்வ ருத்திரனாம் இன்னுஞ் செப்புவன் கேளடி ஞானப்பெண்ணே!

69. செப்பவே வவ்வு மகேசுரனாம் வட்டஞ் சேர்ந்துப சாரம் சதாசிவனாம்
தப்பிலா ஐந்தெழுத்தாலே சராசரந் தங்கியிருந்தது ஞானப்பெண்ணே!

70. வாலையி னட்சர மூன்றாகும் அதை வாய்கொண்டு சொல்பவரார் காணும்
மேலொன்றுங் கீழொன்றும் மத்திம முங்கூட்டி விரைந்து பாரடி ஞானப்பெண்ணே!

71. விரைந்து சொல்லுவன் மூன்றெழுத் தாற் சதம் விரிந்து தானுயுர் உண்டாச்சு;
தெரிந்து கண்டவர் தங்களுக்கு காவலை தீட்சையி தல்லவோ ஞானப்பெண்ணே!

72. தீட்சை யெனுஞ்சிவ சக்கரத் தின்மையைந் தேவியெழுத்தை நிரை நிறுத்திக்
காட்சியுடன் சிவ பூஜை செய் தாற்சித்தி கைவச மாமடி ஞானப்பெண்ணே!

73. கள்ளுண்டு தள்ளுண்டு நில்லாதேபின்பு கஞ்சா உறக்கமுங்கொள்ளாதே;
உள்ளுண்டு சோமக் கலையாதி பானத்தை ஊட்டிக் கும்மியடியுங்கடி!

74. கும்மி அடிப்பெண்கள் அம்பலத்தை யரைக் கூட்டி அமுதங் குடியுங்கடி
அம்மென்றும் உம்மென்றுஞ் சொல்லாமல் நின்ற அத்விதம் பாரடி ஞானப் பெண்ணே!

75. அத்வித மாவத்துக் காதியடி மதி ஆயிரத் தெட்டிதழ்ப் பூசைபண்ண
முத்தி தருஞ் சோமப்பாலை யனுதினம் மூட்டிக் கும்மியடியுங்கடி.

76. மூட்டுவதென்ன திரிகோண வட்ட மூலத்தில் குண்டலி வாசியினால்
நாட்டுவன் பூரண நாலையுங் கட்டினான் ஞாயமி தல்லவோ ஞானப்பெண்ணே!

77. கட்டிக்கொள் விந்துவைத் தள்ளா தேசுழிக் காற்றையடக்கிப் பெருக்காதே
சுட்டி மனப்பொறா துறாதே காமச் சோம்பலைத் தள்ளடி ஞானப்பெண்ணே!

78. சோம்பலுந் தூக்கமும் ஆகாதே அன்ன சுகியுஞ் சோகமுங் கொள்ளாதே.
சாம்ப சதாசிவ நாட்டத்திலே நின்று சார்ந்து கும்மியடியுங்கடி.

79. கைவச மாவது சட்டிவித் தைஞானக் கற்பகமும் வந்து லபிக்குமடி;
தெய்வம் இவரென்று சொன்னாரே நல்ல சித்தரு முத்தரும் ஞானப்பெண்ணே!

80. யோகத்துக் காதியுமைதீட் சைமற்ற யோகத்துக் கெல்லா முதல் தீட்சை
போகத்தைக் கைவிட லாகா தேசுத்திப் பூசையை வேண்டிக் கொள் ஞானப்பெண்ணே!

81.வேண்டிக்கொள் விந்து முகனா தஞ்சத்தி மேவுஞ் சிவத்துடனே பரமாம்
தாண்டிக் கொள் இந்த வகையாறும் யோகசாதக சாக்கிரம் ஞானப்பெண்ணே!

82. சாக்கிரம் விந்துக்கு மேலண்ட மாம் அதைச் சார்ந்திடும் நிற்குண நிட்களந்தான்
பார்க்கில் நிராதார மாமலத் தை அதைப் பாரா விடம் அந்தம் ஞானப்பெண்ணே!

83. அந்த மடியிந்த மேலா றுங்கண்டே ஆரறி வாரடி ஞானவழி?
சிந்தை தெரிந்த பெரியோ ரைக்கண்டு சேவித்துக் கும்மியடியுங்கடி.

84. சேவிப்ப துந்தவ னந்தியடி யோக மாய்நிற்ப தும்விந்து நாதமடி
ஆவிக் கிசைந்த சதாசிவ சாக்கிரம் அவ்விட மாமடி ஞானப் பெண்ணே!

85. அவ்விட்டே யுவ்விட்டே மேற்சுழி யிற்சுழி அங்கியைவிட்டுக் காலாலே
மவ்விட்டு நாதவிந் துட்பொரு ளைக்கண்டு வாழ்த்திக் கும்மியடியுங்கடி.

86. முழக்க மென்ன பிரணவ மாமதை மூட்டுச் சமாதியிலிரேசகத்தை
விளக்கு மாகு மிரவி காந்திநித்தம் வேண்டிக் கும்மியடியுங்கடி.

87. பார்க்குஞ் சுழுமுனை காணா ரேயது மூக்கு நுனியென் றறியாரே
மார்க்க மறிந்து பெரியோ ரைக்கண்டு வாழ்த்திக் கும்மி யடியுங்கடி.

88. வாழ்த்தி யடிபெண்ணே ரேசகத் தைவினை மாற்றியடி பெண்ணே பூரகத்தை
தூற்று மகாமிய சஞ்சிதத் தைத்தொல்லை தொலைத்துக் கும்மியடியுங்கடி

89. பாசமற் றவிடம் கேசர மாம்ஒரு பாதியில் நின்றிட யோகமுமாம்.
நேசமற் றார்பிர்ம ஞான சமாதியும் நிருவி கற்பமாம் ஞானப்பெண்ணே.

90. கற்ப மடியிது மெய்யா குமற்றைக் கர்மமெல் லாமிக அற்பமடி
தற்பரா னந்த சதாசிவ மோனத்தைச் சார்ந்து கும்மியடியுங்கடி!

91. பாசத்தைச் சொல்லும் உடலாக அந்தப் பசுவைச் சொல்லும் உயிராக
நேசத்தில் நிற்பது யாதது பிரம நிட்டையென் பாரடி ஞானப்பெண்ணே!

92. தேகத்துக் காதியாம் ஐம்பூ தமற்றைச் செயலுக் காதியாம் விட்சேபம்
மோகத்துக் காதியா மம்மா யைஇன்னும் முழுதுங் கேளடி ஞானப்பெண்ணே!

93. இன்னமுண்டந்த வியாகிரு தற்கும் இரணிய கர்ப்பன் விண்ணுவுக்கும்
மின்னிய விராடபு ருடனுக் கும்இன் னும் மேலுண்டு சைதன்யம் ஞானப்பெண்ணே!

94. சைதன்ய வத்துவே பிரமமடி அந்தச் சாட்சிக்குப் பிரதி பிம்பமடி
மெய்நின்ற சுத்த அறிவா னால்ப்ரதி பிம்பத்தைத் தள்ளலாம் ஞானப்பெண்ணே!

95. ஆமடி யிந்தப் பதந்தா னேகண்டால் ஆதியும் அந்தமு நீதானே;
நாமடி வாசிக் குதிரையி னால்மிக்க நல்ல கதியடி ஞானப்பெண்ணே!

96. சாதிக் குதிரை வலுவே கஞ்சரு தாரு இருக்கின்றான் மேலாக
வீதிக்கு வீதி சாரிவைத் தாற்பரி வேடிக்கை பார்க்கலாம் ஞானப்பெண்ணே!

97. கட்டுப் படாதந்த அச்சுமட்டம் அது காலோ பன்னிரண்டா கையினால்
எட்டுக் கயிற்றினாற் கட்டிக்கொண் டால்இது மட்டுப்படுமடி ஞானப் பெண்ணே!

98. கட்டுப்படுமோ மலவா யில்நடு மையத்தின் குண்டலி வாசியினால்
எட்டையும் நாலையுங் கட்டியே போற்றிடில் ஏறி நடத்தலாம் ஞானப்பெண்ணே!

99. சூட்சக் குதிரை யடங்கா துசுழிக் கோட்டுக்குட் செல்ல முடியாது
மூச்சுக் காயிரங் காதவழி மிக முந்தி நடக்குதாம் ஞானப்பெண்ணே!

100. குதிரை கட்டிய லாயத்திலே மனக் கோட்டையிலே சந்தைப் பேட்டையிலே
எதிரிதான் வந்து தட்டுகிறான் அதை எனென்று கேளடி ஞானப்பெண்ணே!

101. காமன் எவருக்கும் மூத்தவனாம் அவன் கற்றிடும் வித்தைகள் மெத்தவுண்டாம்!
தாமத மானகு ரோதனும் லோபனுந் தம்பியாம் கேளடி ஞானப்பெண்ணே!

102. மோக மதமிரு பிள்ளைக ளாம்ஒரு மூர்க்க மமசியக்காரனொடு
சேகர வீரசை டம்பனுஞ் சம்பனுஞ் சிநேக மாமடி ஞானப்பெண்ணே!

103. சிநேகனுக் கேற்ற உறவாளி பொல்லாத் தீயவ னாகுமோ ராங்காரி
அநேகத்தைச் செய்யு மவதியில் ரோசனும் அத்தை மகனடி ஞானப்பெண்ணே!

104. பெண்ணே கேளு பதிமூன்றாகிய பேர்களுண்டு பகையாளர்;
ஒன்றே யொன்று வசமா னால் அவர் ஒடுங்குவாரடி ஞானப்பெண்ணே!

105. ஒடுக்கமில்லை யிவரா லேபலன் ஒட்டமெல் லாமனக் கோட்டையிலே
படுகளத்துக்கு மேய்ந்துவ ரப்பசு பற்றுகிறாரடி ஞானப்பெண்ணே!

106. பாம்பி ருக்குது புற்றுக்குள் ளேசுக பந்த மிருக்குது நெஞ்சுக்குள்ளே;
வீம்பை யடக்கி உயர்ந்தக்கால் பரிவேடிக்கை பார்க்கலாம் ஞானப்பெண்ணே!

107. பித்துப் பிடித்த மனக்குரங்கு வெறிப் பேயும் பிடித்துக் கொண்டாட்டமிட்டால்
அத்தை யடக்க மருந்துசெய் தாற்பரி அன்று நடத்தலாம் ஞானப்பெண்ணே!

108. நடத்தாலமே மனவாசி ஒரு நாலைந்து பீற்றலை மூடாமல்
திடத்தினால் மனஞ் சித்தானாற் சித்தந் தெளிந்து கொள்ளலாம் ஞானப்பெண்ணே!

109.  தெளிந்த சித்தகம் பூட்டிய திற்சேணத் தேறும் அறிவை யதிற்சேர்த்துக்
குளிர்ந்து ஞானவை ராக்கியக் குறடா கொண்டு மாட்டடி ஞானப்பெண்ணே!

110. மூலத் தெருவி லொரூபாய்ச் சல்அந்த முச்சந்தி வீதியி லோர்பாய்ச்சல்
மேலைத் தெருவி லொரூபாய்ச் சல்பரி வேடிக்கை பார்க்கலாம் ஞானப்பெண்ணே!

111. அந்த விதங்கள் அறியா மல்மணி மந்திர மென்று திரிகின்றார்.
அந்தரமான எழுத்தறிந் தால்மணி மந்திர மல்லவோ ஞானப்பெண்ணே!

112. மவுன மந்திரங் களினாலே தங்கள் வாய்தனை மூடித் திரிவார்கள்.
புவன சாரம் புசிப்பார்க் குமதி போசனமாகுமோ ஞானப்பெண்ணே!

113. தாயென்று சொல்லுவார் சொப்பனத் திற்காம- சன்னதம் வந்தால் நினைப்பாரோ?
வாய்கொண்டு வேதம் படித்தா லுஞ்சுத்த மௌனந் தங்குமோ ஞானப்பெண்ணே!

114. தாடி வளர்த்துச் சடைவளர்த் துநல்ல சந்யாசி யென்றோரு வேடமிட்டே
ஓடித் திரிந்த விளையாட்டை யிங்கே ஒப்புவ தாரடி ஞானப்பெண்ணே!

115. பேசாதிருக்கும் இடம் பார்த்தே அதைப் பெற்றேயிருப்பது மந்திரமாம்.
ஆசான்என் றேயுப தேசமிட் டாற்குரு அல்லவென் றுகும்மி யடியுங்கடி.

116. சொற்குரு வாலே கதியா மோபொய்யைச் சொல்லுவார் தங்கள் உறவாமோ
சற்குரு வான வரைச்சேர்ந் தேயவர் தம் சொல்லைக் கேளடி ஞானப்பெண்ணே!

117. நானென்ற ஆணவம் பேசார்கள் நல்ல நாடென்றுங் காடென்றுஞ் சொல்லார்கள்
தானென் றியாவையுங் கண்டாரே நல்ல சற்குரு வாமடி ஞானப்பெண்ணே!

118. குருஇருப்பதும் உள்ளத்திலே மனக் கோணல் அறுப்பதுந் தனக்குள்ளே
பொருள் இருப்ப தறியாமல்புடம் போடுவதெப்படி ஞானப்பெண்ணே!

119. வாதஞ் செய்ய அறியா மல்ரச வாதஞ் செய்கிறோமென்று சொல்லிச்
சூதங் கெந்தி புடத்திலிட் டால்அதிற் சொன்னம் விளையுமோ ஞானப்பெண்ணே!

120. லிங்க முருக்க அலைவார்கள் சாதி லிங்க மிருப்ப தறியாமல்;
வங்கமுந் தங்கமும் சேர்த்து ருக்கினால் பங்கமி தல்லவோ ஞானப்பெண்ணே!

121. பாசா ணங்குகை தன்னில் வைத் துவெள்ளைப் பாலாலுட்டிக் குகைமூடி
ஈசானியப்புட மிட்டாலும் அதில் இருப்ப தென்னடி ஞானப்பெண்ணே!

122.காரணமானது காரிய மாவதைக் கட்ட அறியார் முழுமூடர்:
பூரணமென்று திரிந்தா லுமதிற் புண்ணிய முண்டாமோ ஞானப்பெண்ணே!

123. முப்பூ வென்று திரிவார் கள் அந்த மூப்பூ வந்த வகைகாணார்;
அப்பூ வென்று மறிந்தக் காற்சித்தி ஆமென்று கும்மி அடியுங்கடி.

124. காரத்தைக் கட்ட அறியார்கள் கடுஞ் சாரத்தை நீற்றினஞ் செய்யாமல்
வீரத்தைப் பூரத்தைச் சேர்த்தத னாலது வீணல்ல வோசொல்லு ஞானப்பெண்ணே!

125. கோசவித் தையை யறியாமல் லோக வேசத்தி னின்று மலைவார்கள்
கோச பீசம றிந்தா லேவாதங் கோசார மாமடி ஞானப்பெண்ணே!

126. வாதத் திறவுகோல் காணா ரேபஞ்ச பூதச் சரக்கையுந் தோணாரே
ஏதுக்குக் கண்புகைந்தூதுகின் றாரிதை ஏதென்று கேளடி ஞானப்பெண்ணே!

127. துருசு சுன்ன முடிந்தாச் சே அதைச் சோதிக்க எட்டரை மாற்றாச்சு:
பொருளைச் சொல்லிப் பணம்பறிப் பாரிவர்  பொய்க்குரு அல்லவோ ஞானப்பெண்ணே!

128. கவனி சூத முடிந்ததென்பார் ஊசிக் காந்தத்தைக் கிண்ணமுஞ் செய்தோமென்பார்:
புமனி வாதப் புரட்டா லேயவர் பிழைக்கி றாரடி ஞானப்பெண்ணே!

129. பிழைக்க முத்தியறியாமற் சென்ம பூர்வக்கியானத தெரியாமல்
தழையைத் தின்று சருகாகித் திசை தயங்குறாரடி ஞானப் பெண்ணே!

130. தயங்கி யென்ன பலனா மோவனஞ் சாதித்து நிற்கத் திறமாமோ?
மயங்கி டாதே அழலை மகத்துவம் வருவ தெப்படி ஞானப்பெண்ணே!

131. உப்பை யறிந்தவ னேவா திசகத் துப்பை யொழிந்த வனேயோகி
தப்பிலை யேபூமி நாத மகிமையைச் சார்ந்து பாரடி ஞானப்பெண்ணே!

132. வீட்டி லிருக்கு தொரு மூலம்வெளிக் காட்டி லிருக்கு திருமூலம்;
மாட்டி லிருக்கும் பெரியோர்குரசவாதமி தல்லவோ ஞானப்பெண்ணே!

133. தோணா தென்ற சரக்கெடுத் துக்கருஞ் சூரா சூரையில் வைத்தெடுப்பச்
சாணான் கண்ட பொருள்போ லேசித்தி தானென்று கும்மியடியுங்கடி.

134. நெல்லி யிருக்குது காட்டுக்குள் ளேகரு நெல்லயிருக்குது வீட்டுக்குள்ளே;
கொல்லி மலைக்குத் திரிந்தாலும் குரு கொண்டு வருவாரோ ஞானப்பெண்ணே!

135. காயம் பட்டிக்கு ளத்துக்குள் ளேவெள்ளைக் காயா வேரு முளைத்திருக்கும்;
வாயாற் றின்று நிமிர்ந்தக் காலுடல் மாயா தல்லவோ ஞானப்பெண்ணே!

136. கற்ப நிலையறிந் தெண்ணாமல் வெறிக் கஞ்சா உண்டு விழிப்பார்கள்!
அற்பர் குகைமலை சென்றாலும்வத்தை அறியலாகுமோ ஞானப்பெண்ணே!

137. கொங்கணர் சொன்ன கடைக்காண்டம் அதிற் சங்கை யறிவது பிரமாண்டம்;
எங்கள் குருசட்டை மாமுனி யாரிரு நூறும் பாரடி ஞானப்பெண்ணே!

138. நூறி லுரைத்தது மெய்ஞ்ஞா னந்திரு மூலர் உணர்ந்தது வேஞானம்
பூரண கும்ப முனிசொன்ன சூத்திரம் பூண்டகம் பாரடி ஞானப்பெண்ணே!

139. தீட்சையில் மச்ச முனிதீட் சையவர் செப்பின ஞான மொரு நூறும்
தாழ்ச்சிவா ராது பெரியோ ரைக்கண்டு சாட்சி கேளடி ஞானப்பெண்ணே!

140. ரேசக பூரக கும்பகத் தால்வாசி நேரிட்டுச் செய்வதும் ஆசையடி;
கேசர மாகிய அத்வித பிரமத்தைக் கிட்டிக் கும்மியடியுங்கடி.

141. உப்பை விடுவதும் ஆசையடி அன்னம் ஓர்பொழு துண்பதும் ஆசையடி;
செப்ப ஒண்ணாத மனோன்மணி தேவனைச் சேர்ந்து கும்மி யடியுங்கடி.

142. வாசலி லேயொரு மேல்வாசல் அந்த வாசலி லேசிறு வாசலுண்டு;
நேசமு டன்சிறு வாசலிற் பூட்டியே நெருக்கம் பாரடி ஞானப்பெண்ணே!

143. தேசங்கள் போவதும் ஆசையடிகுல தெய்வமுன் டென்பதும் ஆசையடி;
நேச மெம்பிர மஞான சோதியைச் சேர்ந்து கும்மி யடியுங்கடி

144. சமய பேதமும் ஆசைய டிகங்கா ஸ்நான பூசையும் ஆசையடி:
மமதை யற்றுஇருக் கின்ற மமதையை வாழ்த்திக் கும்மியடியுங்கடி.

145. பால்கற வாப்பசு தள்ளுங்க டிபதி பாசத்தை யும்விட்டுத் தீருங்கடி:
மேல்வி ளங்கிய தற்பர சோதியை வேண்டிக் கும்மியடியுங்கடி.

146. தத்துவக் குப்பையைத் தள்ளுங்கடிவேத சாத்திரப் பொத்தலை மூடுங்கடி:
முத்தி தருஞான வத்துவை வாவென்று மூட்டிக் கும்மியடியுங்கடி

147. ஆறா தாரமுந் தொல்லைய டியதற் கப்பாலே யொன்றும் இல்லையடி;
சீராய் நின்ற நிலைபார்த் துப்பெண்கள் சேர்ந்து கும்மி யடியுங்கடி.

148. சித்தர் சொற்படி சித்தானந் தங்கண்டு தெளிந்து கொள்ளடி வேதாந்தம்
தத்துவ மாகிய உற்பத்தி சூக்குமச் சார்பு கேளடி ஞானப்பெண்ணே!

149. சார்புதா னென்னடி வேதாந் தஞ்சொல்லுந் தத்துவந் தானிவ் வகையுடனே
கார ணாதி அவத்தை நிலைகளின் கணக்குரைக்கிறேன் ஞானப்பெண்ணே!

150. உரைக்குந் தத்துவம் நாலே ழிற்கண்ட ஓதுஞ் சித்துரு நாலாறாம்;
மறைக்குட் சொல்லிய சித்துரு நாலாகும் மகிமை பாரடி ஞானப்பெண்ணே!

151. மகிமை யாகிய தொம்பத மாமதில் வந்த வுபாதி யுணர்த்துகிறேன்!
தகைமை யென்னமுன் சொன்ன வதித்திருத் தன் செயல் கேளடி ஞானப்பெண்ணே!

152. வாசல் மிகுந்த உடம்போ டுப்ராண வாயுவோ டிந்திரியம் ஆனதொன்று;
காசலை யாமதி சேர்ந்து வளர்ந்ததன் காரணம் நாலடி ஞானப்பெண்ணே!

153. காரண மென்ப திவையே ழும்வந்து கலந்த தாமடி தொம்பதத்தைத்
தாரண தொம்பத மான துரியத்தில் தன்னுட லாச்சுதாம் ஞானப்பெண்ணே!

154. தன்னுடலாகிய சாக்கிரத் தைத்தனதாக விருந்திடும் ஆத்துமற்குப்
பின் சொல்வதாம் விசுவ னென்ற பிமானப் பேரல்லோ சொல்லடி ஞானப் பெண்ணே!

155. பேர் பெறும் எந்த்ரமு பாதியுடன் கூடப் பெற்றிடு சூட்சமச் சொப்பனத்தின்
சார்பி லிருந்த துரியற்கு நாமமுஞ் சைதன் யமடி ஞானப்பெண்ணே!

156. ஆகும் பிராணநல்ல வாயுயவு டன்கூடி அடங்கி மூலத்து டன்சேர்ந்து
சேகர மாவந்த நாத துரியத்தைச் சேர்ந்திடிற் காரண தேகமடி

157. சேர்ந்த அவத்தைச் சுழுத்திய டியதைச் சேர்ந்தவனும் பிராக்ஞ னாகுமடி
கூர்ந்த மூன்றையுங் கண்ட துரியத்தைக் கும்பிட்டு கும்மியடியுங்கடி!

158. கும்பிட்டுத் தொம்பதச் சித்தார்த் தங்கண்டு கூறிய ஞாயம் இதுபோல
அம்பிட்டுத் தற்பத மான விவேகத்தை அறியச் சொல்லுவேன் ஞானப்பெண்ணே!

159. அறிவ தென்னடி தொம்பத மாம்பொருள் ஆன வுபாதியும் ஆனதுபோல்
சருவ தற்பர மான பொருளுக்குத் தன்னுடைச் சீவன் துரியமடி;

160. சர்வஞ்ஞ னுஞ்சரு வக்கார னுஞ்சரு வேந்திரி யாமிசர் வேசுரனுஞ்
சர்வ சிருட்டி சர்வதி திசர்வ சங்கார னும்பேராம் ஞானப்பெண்ணே!

161. பேரான தென்ன இவையே ழுமிகப் பேசிடில் வேதும் துரியமடி;
தோரா உபாதியைப் பெற்றத னால்முத்தி தூசணம் உண்டாச்சு ஞானப்பெண்ணே!

162. தூசணச் சீவன் இவையே ழுங்கண்டு சொல்லும் பரனுக் குடலாச்சு;
சாசுவ தமென்ற தானத்தி னாற்சாயா கிரக மென்றுபேர் ஞானப்பெண்ணே!

163. சாக்கிரந் தன்னைத்தா னென்றுசொல் லியப்பால் தானபி மானித் தருந்தாக்காற்
சேர்க்க விராட்டெனச் சொல்லுவார் நாமந் தெரிந்து கொள்ளடி ஞானப்பெண்ணே!

164. தெரிந்த மூன்றனு பாதியு மாம்அதிற் சேர்ந்த பரன்பர சொப்பனமாம்;
பிரிந்தி டாதபி மான னிரணிய கற்பன்என் பாரடி ஞானப்பெண்ணே!

165. பாருமி திலொரு பாதியு டன்பரா பரனுக் கல்லவோ பார்சுழுத்தி
சேரும் பொழுது வியாகிரு தனெனச் சிந்தையிற் காணடி ஞானப்பெண்ணே!

166. காணடி தற்பர சத்தார்த் தமதைக் கண்டு தெரிந்த வகைபோல
ஊணடி ஞான சிவப தார்த்தத்தில் உண்மையைக் கேளடி ஞானப்பெண்ணே!

167. உண்மையாந் தற்பர நற்றுரி யங்கண்டும் உற்றுப்பா ராதொரு தோடமதால்
தண்மைச் சிவபத சுத்துனுக் குப்பரன் தன்னுடலாச்சுது ஞானப்பெண்ணே!

168. ஓதும் பரம்விஸ்வ கிராசமடியுப சாந்தமெ னும்வகை மூன்றி லொன்றைச்
சாதனை செய்த சிவத்துக்கல் லோபர சாக்கிரமாகுமே ஞானப்பெண்ணே!

169. ஆகும் பொருள் சிவ சாக்கிரத் தையபி மானித்திருந்த சிவதுரியம்
சேகர மாயிடிற் சிற்சொ லிதையென்று  செப்பிடும் வாக்கியம் ஞானப்பெண்ணே!

170. வாக்கிய மாம்விஸ் வகிராசம டியந்த மார்க்கமென் னசிவ சொப்பனத்தைப்
பாக்கி யனபி மானிடத் திற்பிர சாபத்தனென்று சொல் ஞானப்பெண்ணே!

171. சொல்வது மென்ன உபசாந் தஞ்சிவ சுழுத்தி தானென்றி திருந்தக்கால்?
நல்லது பொற்புறு சாந்தனென் றாலது நாமம தல்லவோ ஞானப்பெண்ணே!

172. நாமச் சிவதுரி யத்தில டியபி மான மிழந்து தனித்ததனால்
நேமமி தல்லவோவாதி துரியத்தின் நிலைமை கண்டிலர் ஞானப்பெண்ணே!

173. கண்டறி யாதது முற்றிரி  யமதைக் கண்டு சுழன்றுமே லானதடி;
பண்டு பிரமவா னந்த சொரூபத்தைப் பணிந்து கும்மியடியுங்கடி.

174. பணிந்த ஞான மதுதாண் டிபர மானந்த மானது இதுதாண்டி;
துணிந்து பாருமா னந்தசொ ரூபனைத் தொழுது கும்மியடியுங்கடி.

175. தொழுது கொள்ளுஞ் சுகசீவ பர சுத்தப் பொருளு மிது தாண்டி;
பழுதி லாத சொரூபக்கு ருவுடைப் பாதம் இதல்லவோ ஞானப்பெண்ணே!

176. பாதமி தாகிய தொம்பத மாம் அதிற் பாதமுந் தற்பர மானதடி;
பேதவு பாதி யவத்தைக ளும்பல பேர்களு மானது ஞானப்பெண்ணே!

177. பேருக்குச் சார்ந்த துரியம டியதைப் பேசவுந் தற்பிர காசமடி;
யாருக்குங் கண்டறி யாத பொருளைக்கண் டகந் தெளிந்து கும்மியடியுங்கடி.

178. முத்தி பெறுந்தேவ தத்தனைப் போற்சக முழுதுந் தன்மய மானதடி:
நத்தியே விட்டுவிடாதே இலக்கண ஞானம் இதல்லவோ ஞானப்பெண்ணே!

179. ஞானமாம் மோட்சம் இதுதாண் டிமற்ற ஞாயமெல்லாமன மாயமடி:
தானசங் கற்ப விகற்ப சமயமுந் தன்மய மானது ஞானப்பெண்ணே!

180. தூர தூரமும் இல்லைய டியதைச் சொல்வதுங் கேட்பதும் இல்லையடி
தாரார் பிரமநிலை பார்த் துப்பெண்கள் தாண்டிக் கும்மியடியுங்கடி.

181. அண்டமும் பிண்டமும் பாழாச் சே அதற் கப்பா லும் பெரும் பாழாச்சே;
உண்டில்லை யென்று பராபரப் பிரமத்தை உவந்து கும்மியடியுங்கடி!

182. சொல்லினுங் கல்லினும் நில்லா தேபிரம சோதியை யாதியைத் தூவெளியை
வல்லதத் தற்பிர காச மவுனத்தை வகைய றிந்துகொள் ஞானப்பெண்ணே!

183. பிருதிவி தூய்மை மயமாச் சேயதில் பேதம் பலபல உண்டாச்சே;
சுருதி முடிவைக் குருசொல்லு வார் அந்தச் சூட்சந் தெரியுமோ ஞானப்பெண்ணே!

184. அறிந்து கொண்ட பெரியோர் பாதங்கள் அர்ச்சனை செய்து கும்மித்தமிழைப்
பிரிந்தி டாமனூற் றெண்பத்தைந் துகண்ணி பேசினேன் சற்குரு தாள்வாழி

185. சற்குரு பாத மிகவா ழிவாலை சாமி தமிழ்நிதந் தான்வாழி!
நற்குண ஞானக்கும் மித் தமிழ் கற்றவர் ஞான நெறியே மிக வாழி.

அகத்தியர் ஆகாய காவியம்

அகத்திபர் ஆகடிய காவியம் by Sithargal Rajiyam on Scribd

வாரியார் சுவாமிகள் -அருணகிரிநாதர்



எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து அவதிப்பட்டார். என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட்டதால், கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்கினார். அதனால் இவரது சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடன் கடிந்து கொண்டபோது, தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.


அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், அவரது தொழுநோயைக் குணப்படுத்தினார், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது

அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன, மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக உள்ளன

வாரியாரின் வாழ்க்கைப்பாதையில்




காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பழுதுபட்டிருந்த எட்டு
திருமதில்களையும் திருப்பணி செய்தார் வாரியார். அதன் பிறகு, காஞ்சிப்
பெரியவருக்கு வாரியார் மீது தனிப்பட்ட கருணை ஏற்பட்டது. அங்கு ராமாயண
விரிவுரையும் செய்தார். அதன் நிறைவு விழாவன்று, சுவாமி நானூறு ரூபாய்
மதிப்புள்ள சாதராவை அனுப்பி ஆசியளித்தார். ஒருமுறை பெரியவர் சென்னை
சமஸ்கிருத கல்லூரிக்கு வந்தார். வாரியார் அவரைக் காண விரும்பினார்.
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் ராஜகோபுரத் திருப்பணிக்காக இருமுறை தொடர்
விரிவுரை செய்து உதவியதால், அக்கோயிலின் அறங்காவலர் துரைசாமி ஐயங்கார்,
வாரியாருக்கு மிகவும் வேண்டப்பட்டவராக இருந்தார். அவரிடம் பெரியவரை
எப்போது தரிசிக்க முடியும் என்று அறிந்து வருமாறு ஆள்அனுப்பினார்
வாரியார். அவர் போய், மறுநாள் மாலை மூன்று மணிக்கு பெரியவரைத் தரிசிக்க
நேரம் கிடைத்துள்ளதாக தகவல் கேட்டு வந்தார்.

மறுநாள் மாலை மூன்று மணிக்குச் சமஸ்கிருத கல்லூரிக்குச் சென்றார் வாரியார். அங்கிருந்த மடத்து காரியஸ்தர்,"" நீங்கள் வந்திருக்கின்றீர்களா என்று பெரியவாள், இரண்டு
மூன்று முறை கேட்டுவிட்டார்கள். சீக்கிரமாகப் போங்கள்,'' என்றார்.வாரியார் விரைந்து சென்றார். அங்கே காஞ்சிபெரியவர் மணல் கேணி (சுவாமிகள் குளிப்பதற்கான கிணறு)அருகே அமர்ந்திருந்தார்.""நீங்கள் விழுந்து வணங்கக் கூடாதாம். இது சுவாமிகளின் கட்டளை!'' என்று மடத்துக் காரியஸ்தர் வாரியாரிடம் ஏற்கனவே கூறியிருந்தார்.


ஆனால்,வாரியார் பெரியவரைக் கண்டதும், அடியற்ற மரம் போல வீழ்ந்து நமஸ்காரம்
செய்தார். பெரியவர் வாரியாரிடம்,""நீ மார்பில் சிவலிங்கம் தரித்துக் கொண்டிருக்கிற சைவன். விழுந்து வணங்கினால் சிவலிங்கமும் கீழே விழும். அதனால், விழுந்து வணங்கக்கூடாது என்று சொல்லியிருந்தேனே? அவர்கள் சொல்லவில்லையா?'' என்று கேட்டார். வாரியார் ஏதும் பேசாமல் மவுனமாக நின்றார். பெரியவர் வாரியாரிடம், ""உன் தம்பி திருமாமணாளன் சவுக்கியமா?'' என்று கேட்டார். இதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார் வாரியார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மின்னல் என்னும் ஊரில்,
வாரியாரின் தம்பி திருமாமணாளன், மாணவர்களுக்கு தேவாரம், திருப்புகழ் கற்பித்துக் கொண்டிருந்தார். அப்போது, பெரியவர் அந்த ஊரில் தங்கியிருந்தார். அவருடைய பூஜையில் திருமாமணாளன் தேவாரம், திருப்புகழ் பாடினார். அங்கிருந்தவர்கள், ""இவர் வாரியார் தம்பி திருமாமணாளன்'' என்று பெரியவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்த ஒருமுறை தான் காஞ்சிப்பெரியவர்வாரியாரின் தம்பியைச் சந்திருந்தார். அதன்பிறகு
சந்திக்கவே இல்லை. அவரது பெயரும் பத்திரிகையில் வரக்கூடிய அளவுக்கு பிரபலமானது அல்ல. அவரிடம் பழகியவர்கள் கூட "திரு' என்ற சொல்லை அடைமொழி என்று எண்ணிக் கொண்டு "மாமணவாளன்' என்று தான் சொல்வார்கள். ஆனால், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் வாரியாரிடம் ""தம்பி திருமாமணாளன் சுகமா?'' என்று கேட்ட பெரியவரின் நினைவாற்றலை எண்ணி வியப்படைந்தார். இந்த சமயத்தில், கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. அங்கு வந்தார். பெரியவரிடம், ""இவர் வயலூர் முருகன் கோயிலுக்குத் திருப்பணி செய்தார்,'' என்று சொல்ல ஆரம்பித்ததுமே, பெரியவர் சிரித்துக் கொண்டே, ""அதெல்லாம் சரி. உங்கள் ஊரில் செய்த திருப்பணியைச் சொல்லவில்லையே?'' என்று கேட்டு அவரை மடக்கினார். அவருடைய ஊர் மோகனூர். அங்குஅருணகிரிநாதருக்கு அறச்சாலைத் திருப்பணி செய்திருந்தார் வாரியார். அவ்வழியாகச் சென்ற பெரியவர் ஒருமுறை அங்கு தங்கி பூஜை செய்தார். அதைத் தான் அப்படி குறிப்பிட்டு,
""வாரியாரைப் பற்றி உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்,'' என்று சொல்லாமல்
சொன்னார்.

கடுக்காய்





Botanical name: Terminalia chebula
Common name: Yellow Myrobalan
Vernacular name: கடுக்காய் Kadu-k-kai
Useful parts: Mesocarp and exocarp of the berry
Medicinal uses:Good remedy for stomach growling,constipation.Its used in drugs for healing rheumatoid arthritis, cardio diseases.

#கடுக்காய்:

அறு சுவையில் ஒரு சுவையான உப்பு தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, எரிப்பு ஆகிய ஐந்து சுவை நிறைந்த கடுக்காயில் வாத-பித்த-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

பயன்கள் :

ஜீரண சக்தி அதிகரிப்பு, இளமை பாதுகாப்பு, புத்தி சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் தருகிறது.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக ஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும்.

இதனால் உடலின் முழு இயக்கமும் சீரடையும். நோய் அண்டாது. இளமையோடு நீண்ட நாள் வாழலாம். அதனால்தான் “காலையில் இஞ்சி… நண்பகல் சுக்கு… மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண கோலை ஊன்றி குழைந்து நடந்தவர் கோலை வீசி குலாவி நடப்பரே..”- என்று சித்த மருத்துவ பாடல் குறிப்பிடுகிறது.

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: கடுக்காய் ஒன்றே போதுமே!

மருந்துப் பொருட்களில் மிகவும் உயர்ந்த ஒரு பொருள் கடுக்காய். கடுக்காயில் மருத்துவ குணங்களுடன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய குணங்களும் நிரம்பியுள்ளன.

சாதாரணமான இரண்டு கடுக்காய்களை அதனுள்ளே இருக்கக் கூடிய கொட்டையை நீக்கி, தோல் சதையுடன் கூடிய பகுதிக்குச் சம அளவு கரும்பு வெல்லம் கலந்து இரண்டையும் பற்களால் கடித்து தினமும் காலையில் உணவுக்கு முன் ஒரு வேளை மட்டும் சுவைத்துச் சாப்பிடலாம். வெல்லத்துக்குப் பதிலாக தேனும் கலந்து சாப்பிடலாம். கடுக்காயின் பாதி அளவு சுக்கு, கடுக்காயின் கால் பங்கு திப்பிலி, கடுக்காயின் கால் பங்கு இந்துப்பு என்ற அளவிலும் சாப்பிடலாம். இதில் சுக்கு – திப்பிலி – இந்துப்பு மூன்றையும் சூரணம் செய்து, சூரணம் செய்யாத கடுக்காய்த் தோலுடன் ஒன்றாகக் கலந்து கடித்துச் சாப்பிட்டால் பிணியின்றி இன்பத்துடன் நீண்டகாலம் வாழும் பாக்கியம் கிடைக்கும். பருவ காலங்களுக்குத் தகுந்தபடியும் மேற்குறிப்பிட்ட மருந்து சரக்குகளைக் கடுக்காயுடன் கலந்து சாப்பிட்டாலும் மேலும் பல நன்மைகளைப் பெறலாம்.

வாதம் எனும் உடல் தோஷம் மழைக்காலத்தில் இயற்கையாகவே கூடுவதால், காலையில் எழும்போது தசைப் பிடிப்பு, மூட்டு வலி, பூட்டுகளில் வீக்கம் வலி போன்றவை அதிகம் தென்படும். இரண்டு கடுக்காய் தோலுடன் இந்துப்பு சேர்த்துச் சாப்பிட்டால், இந்த உபாதைகள் நன்கு குறையும்.

பித்தம் எனும் தோஷம் மழைக்காலத்துக்கு அடுத்த பருவகாலமாகிய இலையுதிர்க் காலத்தில் உடலில் கூடுகிறது. இதனால் உடல் சூடு அதிகமாகி, வாய்ப்புண், கண்ணெரிச்சல், சிறுநீர் எரிச்சல், வியர்வை கூடுதல் போன்ற உபாதைகள் கூடும். பழுப்புச் சர்க்கரையுடன் கடுக்காய்த் தோலைச் சாப்பிட்டால், இந்த பித்த தோஷம் அமைதியாகிவிடும்.

முன் பனிக் காலத்தில் கபதோஷம் வளர்ந்து, தலை பாரம், தலைவலி, உடல் கனம், பசி மந்தம் போன்றவை தோன்றும். சுக்குப் பொடியுடன் கடுக்காய்த் தோல் சாப்பிட்டால் எல்லா உபாதைகளையும் தவிர்க்கலாம். கபம் உறையும். கடும்பனிக் காலத்தில் திப்பிலி பொடியுடனும், நெஞ்சிலிருந்து கபம் உருகி வயிற்றில் பசியைக் குறைக்கும், வசந்தகாலத்தில் தேனுடனும், கபம் வறண்டு போகும் கடும் கோடையில் வெல்லத்துடனும் கடுக்காய்த் தோலைச் சாப்பிடுவது உடலைப் பிணியின்றிக் காக்கும். சிறந்த பயனைத் தரும் என்று பிருந்த மாதவர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார். இதில் உணவுக் கட்டுப்பாடு என்றும் எதுவும் கிடையாது. தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகள், ஜீரண உறுப்புகளைச் சார்ந்த நோய்கள் ஒன்றும் அணுகாது என்று அவர் மேலும் தெரிவிக்கிறார்.

துன்பத்தைத் தரும் சில பிணிகளாகிய பசியின்மை, வயிறு உப்புசம், ருசியின்மை, புளித்த ஏப்பம், மலச்சிக்கல் போன்ற அஜீரண நோய் நிலைகளில் கடுக்காய் தோல் 9 கிராம், சுக்கு, திப்பிலி, இந்துப்பு வகைக்கு 3 கிராம் சேர்த்துச் சாப்பிட உகந்தது. இதில் திப்பிலியை மட்டும் லேசாய் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நான்கு சரக்குகளையும் ஒன்றாய் இடித்துத் துணியால் சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். கொஞ்சம் சர்க்கரை சேர்த்துத் தண்ணீருடனோ, வெறும் தேனுடன் குழைத்தோ சாப்பிடலாம். வெறும் வெந்நீருடனும் சாப்பிடலாம்.

உடலில் பலம் வெகு நீண்ட காலம் குன்றாமல் நிலைத்திருக்க, சுமார் 2 கிராம் கடுக்காய்த் தோல் சிறு சிறு துண்டங்களாக்கி சுமார் 15 மி.லி. அளவு பசு நெய்யுடன் நன்றாகப் பொரித்து ஆறிய பிறகு அந்தக் கடுக்காய்த் தோலை கடித்துச் சாப்பிட்டு, அந்த நெய்யையும் உடனே குடித்தால் போதுமானது

திருவள்ளுவர் ஞானம்

திருவள்ளுவர் 

காப்பு

எண்சீர் விருத்தம்

அண்டபிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டபரி பூரணத்தின் அருனே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி
மதுரதமி ழோதும்அகத் தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்துநின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி!

கட்டளைக் கலித்துறை

1. அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் தும்மதி லேயிருந்தும்
நன்னய மாய்ப்பத்துத் திங்களு நானகத் தேயிருந்தேன்;
என்ன அதிசயங் காணிவ் வுலகி லேயமைந்த்
உன்னத மெல்லா மமைத்தேன் உண்மையைக் காண்கிலரே!

2. அம்புலி தன்னி லேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புல கத்தார் வசியமாய்க் கைப்பிடித் தேபிரிந்து
கும்பி தனிலே யுழன்றுமக் குண்டலி பொற்கமலம்
நம்பி யிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே!

தரவு கொச்சகம்

3. அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குங் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயொழித்தேன்;
விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே.

4. வையமதி லேயுதிக்கு மாண்பர்களே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்?
அய்யமில்லா வாழ்ந்துலகி லாண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே!

கட்டளைக் கலித்துறை

5. வீடான மூலச் சுழிநாத வீட்டில் விளங்கும் விந்து
நீடாழி லோகந் தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
தேடாத ழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன?
காடான நாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே?

6. எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியி லெய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்துப் பொருள் போதகத்தால்
சுழியக் சுழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நா ளிருந்தும் அனித்தியமே!

7. எந்நா ளிருந்தென்ன முன்னா ளனுப்படி யிந்தவுடல்
தன்னா லழிவதுந் தான்றி யாதெனத் தந்தைவிதி
உன்னா லழிவ துடலுயிர் காய மொழிவதுங்கண்
டந்நா ளனுப்படி கண்டு மிருந்தறி யாதவரே!

8. யோனிக்கு ளாசை யொழியா தனித்தியமு ங்களுயிர்:
தேனிக்கு ளின்பஞ் சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக் காய முடலற்றுப் போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகா டொழிய இனியில்லையே!

நேரிசை வெண்பா

9. இந்தவுடல் காயம் இறந்தவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கையோ இந்தவுடல்
அற்பக் குழியி லரவ மிருப்பதெனும்
கற்பகத்தை யாண்டிடுமோ காண்.

10. ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால்----ஞானமது
கண்டால் உடலுயிருங் காயம் வலுவாகும்
உண்டால் அமிர்த ரசம் ஊண்.

11. சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன
வழியறியார்க் கென்னஎய்து மாறு-சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண்.

12. வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே வேதமறை
நாலு பொருளுள் நற்பொருளின் ஆறறியப்
பாலுமது நெய்யெனவும் பார்.

13. முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு.

14. காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே- காய்சித்தி
மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுதுஇனிக்
காலமென்னி ரண்டாண்டில் காண்.

15. கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
வல்வினைக்குள் ளாகி மரணமார் கல்லுப்பு
வெள்ளைக்கல் லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளமதி லுண்டென்றே உன்.

16. என்றுமிந்த துப்பாகும் எண்சா ணுடலிருக்கக்
கண்டுமறி யாததென்ன காரணமோ? என்றுமதி
வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
விரியமா யானுணரு மெய்.

17. உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
முப்புசுன்ன மாவதற்கு முன்னமே-உப்பதனால்
கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச்
செற்பாயும் வாசியில் தேகம்.

18. அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போம்
அஞ்சு வசப்படுவ தாண்டதனில்- அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் காட்சி யதினினைவு
விண்டறிய லாமே விதி.

19. எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் கண்காணத்
தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி பூசைவிதி யுன்.

முருகப் பெருமானின் கம்பத்துக் காட்சி

 


அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பல திருப்புமுனைகளைக் கொண்டது. இவரது பாடல்களில் மிகுந்த கவிதை இன்பங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடல், அருமையான பொருள் கொண்ட தமிழ்ப் பாடல்.

அவர் இயற்றிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவை அவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று. இவர் தமிழ்க் கடவுள் முருகனின் சீரிய பக்தர். இலங்கைத் தலங்களான யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் ஆகிய தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார்.

இவரது முற்பிறவிகள் குறித்த தகவல்கள் மிக சுவாரஸ்யமானவை. அகத்திய முனிவர், நாயொன்றை வளர்த்து வந்தாராம். அந்நாய் தேவேந்திரனாக முதல் பிறவி எடுத்ததாம். பின்னர் அர்ச்சுனன், கண்ணப்ப நாயனார், நக்கீரர், அருணகிரிநாதர் என்ற வரிசையில் அந்நாய்க்குப் பிறப்புகள் உண்டானதாகத் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அருணகிரி புராணத்தில் காணக் கிடைக்கிறது. இதனைக் கட்டுக்கதை என்று மறுத்துக் கூறுபவர்களும் உண்டு. அருணகிரிநாதர், இளம்வயதில் மது, மாது என்று மனம் விட்டார் என்றும், நாத்திகனாக இருந்தார் என்றும் கூறுவர். ஆனால் பின்னாளில் இல்லறத்தை நல்லறமாக நடத்தியவர்.

உடல் நலமின்மையைத் தாங்க முடியாத அவர், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோபுரம் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றபோது, முருகப் பெருமான் இவரைத் தம் திருக்கரங்களால் தாங்கி, உயிரைக் காத்தார் என்கிறது தலபுராணம். மேலும் சக்தி அளித்த வேலால் அருணகிரியார் நாவில் எழுதப் பிறந்தது கவிதைப் பிரவாகம். இவருக்கு முருகனின் தலங்களான வயலூர், விராலிமலை, சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய தலங்களில் முருகன் காட்சி அளித்ததாகப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். இவரது வேண்டுகோளுக்கு இணங்கக் கம்பத்தில் அதாவது தூணில் முருகப் பெருமான் காட்சி அளித்ததாக ஐதீகம். அம்முருகப் பெருமான் கம்பத்து இளையனார் என்ற சிறப்பு பெயர் கொண்டு இன்றும் அத்தூணில் சிலாரூபமாகக் காட்சி அளிக்கிறார்.

கிளி உருவம் கொண்ட அருணகிரியார் விண்ணுலகம் சென்று அமிருத மலரான கற்பக மலர் கொய்து முருகனுக்கு அர்ச்சித்தார் என்பர். அவர் கிளி உருவமாக இருந்தபோதுதான், முருகனின் சிலாரூபத்தில் தோளில் அமர்ந்து கந்தர் அனுபூதி பாடியதாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை மெய்ப்பிப்பது போலக் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று திருக்குமரா… என்கிறது கந்தரனுபூதிப் பாடல் வரிகள். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த அருங்கவியின் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாக வெளியிட்டுள்ளது.


திருமூல நாயனார்


ஞானம் -  20

அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி
அகாரமெனும் எழுத்த துவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலந் தன்னில்
முப்பொருளுந் தானாகி முதலு மாகிப்
படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்
படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி
அடியாகு மூலமதே அகார மாகி
அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே.
1
   
அதுவாகி அவனவளாய் எல்லா மாகி
அடிநடுவு முடிவாகி அகண்ட மாகிப்
பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம்
புகலிடமாய் எப்பொருட்கு மூல மாகி
மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி
மலராகி மணமாகி மதிக்க வொண்ணா
அதுவாகும் அகாரமதே மூல மாகி
அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம் மூல மாமே.
2
   
மூலமெனு மாதார வட்டந் தானே
முச்சுடரு முக்கோண மூன்று நாடிச்
சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந்
திருவடியுந் திருமேனி நடமு மாகும்
கோலமு டனண்டமெல்லாந் தாங்கிக் கொண்டு
கொழுந்து விட்ட கம்பமதாய் மேலே நோக்கி
ஆலமுண்ட கண்டெமலாந் தானாய் நின்ற
அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே.
3
   
அறிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்;
அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்;
பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்;
பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்;
அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை;
அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே.
4

 

நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை
நுண்பொருளாஞ் சிற்பரத்தி னூடே நோக்குந்
தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்
திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்
போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்;
ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே
அனுதினமும் நோக்கிநிற்பார் ஆசா னாமே.
5
   
ஆசானு மீசானு மொன்றே யாகும்
அவனவளு மொன்றாகும் அது தானாகும்;
பேசாத மந்திரமு மிதுவே யாகும்;
வேரொளியின் வடிவாகும்; பேரு மாகும்
நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்;
நிலையான ஓங்கார பீடமாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்கு
இன்பமுடன் கயிலாச மெய்த லாமே.
6
   
எய்தரிய பரமசிவத்தின் மூலந் தன்னில்
இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
எய்தரிய பரசிவத்தின் மூலந் தன்னில்
இருசுடரு முதித்தொடுங்கு மிடமேயென்று
மெய்தொழியுஞ் சுழுமுனையே கம்ப மாகி
மெய்ப்பொருளாஞ் சோதியென மேவி நிற்கும்;
இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை
இருநேர மற்றிடத்தே யிறைஞ்சிக் காணே.
7
   
காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்;
காணரிய பொருளாகுங் காட்டும் போதே
ஆண்பெண்ணாய் அலியாகி அடியு மாகி
அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் காணா
வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்
தேடரிய பாதமென்றே தெளிந்து நோக்கே.
8

 

தெளிவரிய பாதமது அகார மாகிச்
சிற்பரமுந் தற்பரமுந் தானே யாகி
அழிவரிய சோதியது தானே யாகி
அடிமுடிவு முடியாகி யமர்ந்து நின்று
மொழிவரிய முதலாகி மூல மாகி
முச்சுடருந் தானாகி முடிந்த சோதி
சுழியினிலே முனையாகிக் கோப மாகிச்
சொல்லரிய வெழுத்தென்றே தொகுத்துப் பாரீர்.
9
   
தொகுப்பதும் தாம் மந்திரங்கள் கருவி நூல்கள்
சொல்லரிய தத்துவங்கள் தம்மை யெல்லாம்
வகுத்துடனே யிவற்றையெலாங் கண்டு நீங்கி
வாகான உடலுயிரை வகையாற் கண்டு
பகுப்புடனே சேராமற் பாதந் தன்னைப்
பரகதிக்கு வழியனெவே பற்றிக் கொண்டு
விகற்பமிலா மூலமதில் நின்ற சோதி
மேலான பாதமென்றே மேவி நில்லே.
10
   
மேவியதோர் சற்குருவின் பாதந் தன்னை
மெய்ஞ்ஞான மென்றதனை மேவிக் கொண்டு
ஆவியுடல் காயமெல்லா மறிந்து பார்த்தே
அத்தனார் வடிவமென்றே அறிந்துகொண்டு
பாவனையு வானவெல்லாம் விட்டு நீங்கிப்
பகலிரவு மற்றிடத்தே கருத்தை வைத்துச்
சீவனையுஞ் சிவந்தனையும் ஒன்றாய்த் தானே
திருமூலர் பாதமொன்றித் திடமாய்க் காணே.
11

 

கொங்கண சித்தர்


வாலைக்கும்மி :
 
விநாயகர் துதி
1:

 

கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
செல்வியின் மேற் கும்மிதனைச் செப்புதற்கே - நல்விசய
நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
பாதம் வஞ்ச நெஞ்சினில்வைப் போம்.

கும்மி
1:

 

சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்த
உத்தமி மேற் கும்மிப் பாட்டுரைக்க
வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம்வாலை
சித்தி விநாயகன் காப்பாமே.

சரஸ்வதி துதி
1:

 

சித்தர்கள் போற்றிய வாலைப் பெண் ணாமந்த
சத்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்
தத்தமி தோமென ஆடுஞ் சரஸ்வதி
பத்தினி பொற்பதங் காப்பாமே.

சிவபெருமான் துதி
1:

 

எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்
கங்கை யணிசிவ சம்புவாஞ் சற்குரு
பங்கயப் பொற்பதங் காப்பாமே.

சுப்பிரமணியர் துதி
1:

 

ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
மானைப் பெண் ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
மால்முரு கேசனுங் காப்பாமே.

விஷ்ணு துதி
1:

 

ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம்வாலை
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்
காண்டீப னாம்பணி பூண்டவன் வைகுந்தம்
ஆண்டவன் பொற்பதங் காப்பாமே.

நந்தீசர் துதி
1:

 

அந்தரி சுந்தரி வாலைப்பெண் ணாமந்த
அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்
சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
நந்தீசர் பொற்பதங் காப்பாமே.

நூல்
1:

 

தில்லையில் முல்லையி லெல்லையு ளாடிய
வல்லவள் வாலைப் பெண் மீதினிலே
சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
தொல்லை வினை போக்கும் வாலைப் பெண்ணே!

2:

 

மாதா பிதாகூட இல்லாம லேவெளி
மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று
புகுந்தா ளிந்தப் புவியடக்கம்

3:

 

வேதமும் பூதமுண் டானது வும்வெளி
விஞ்ஞான சாத்திர மானதுவும்
நாதமுங் கீதமுண் டானது வும்வழி
நான் சொல்லக் கேளடி வாலைப் பெண்ணே!

4:

 

முந்தச் செகங்களுண் டானது வும்முதல்
தெய்வமுந் தேவருண் டானதுவும்
விந்தையாய் வாலையுண் டானது வும்ஞான
விளக்கம் பாரடி வாலைப் பெண்ணே!

5:

 

அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்
தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்.

6:

 

ஆதியி லைத்தெழுத் தாயினாள் வாலைப்பெண்
ஐந்தெழுத் துமென்று பேரானாள்
நாதியி னூமை யெழுத்திவள் தானல்ல
ஞான வகையிவள் தானானாள்.

7:

 

ஊமை யெழுத்தே யுடலாச்சு மற்றும்
ஓமென் றெழுத்தே யுயிராச்சு
ஆமிந் தெழுத்தை யறிந்துகொண் டுவிளை
யாடிக் கும்மி யடியுங்கடி.

8:

 

செகம்ப டைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
உகமு டிந்தது மஞ்செழுத் தாம்பின்னும்
உற்பன மானது மஞ்செழுத்தாம்.

9:

 

சாத்திரம் பார்த்தாலுந் தானுமென்ன வேதந்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?
சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்

10:

 

காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்
காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டு தியானஞ் செய்தால்.

11:

 

ஆயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயறி
வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே
வாயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயிந்த
வாலையு மைந்தா மெழுத்துக்குள்ளே.

12:

 

அஞ்செழுத் தானதும் எட்டெழுத் தாம்பின்னும்
ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு
நெஞ்செழுத் தாலே நினையா மலந்த
நிசந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே

13:

 

ஏய்க்கு தேய்க்கு தஞ்செழுத் துவகை
எட்டிப் பிடித்துக் கொளிரண்டெழுத்தை
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
நிலையைப் பாரடி வாலைப் பெண்ணே!

14:

 

சிதம்பர சக்கரந் தானறி வாரிந்தச்
சீமையி லுள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கர மென்றால் அதற்குள்ளே
தெய்வத்தை யல்லோ அறியவேணும்.

15:

 

மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமு றுதியும் வைக்கவே ணும் பின்னும்
வாலை கிருபையுண் டாகவேணும்.

16:

 

இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
தீமட்டு திந்த வரி விழிக்கே
கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி.

17:

 

ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை
உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே;
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே.

18:

 

உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்
வைத்த விளக்கும் எரியுதடி;
அச்சுள்ள விளக்கு வாலையடிஅவி
யாம லெரியுது வாலைப் பெண்ணே!

19:

 

எரியு தேஅறு வீட்டினி லேயதில்
எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை;
தெரியுது போக வழியுமில் லைபாதை
சிக்குது சிக்குது வாலைப் பெண்ணே!

20:

 

சிலம்பொ லியென்னக் கேட்டுமடிமெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடி;
வலம்புரி யச்சங்க மூது மடிமேலே
வாசியைப் பாரடி வாலைப் பெண்ணே!

21:

 

வாசிப் பழக்க மறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்;
நாசி வழிக்கொண்டு யோகமம் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப் பெண்ணே!

22:

 

முச்சுட ரான விளக்கினுள் ளேமூல
மண்டல வாசி வழக்கத்திலே
எச்சுடராகி யந்தச் சுடர்வாலை
இவள் விட வேறில்லை வாலைப் பெண்ணே!

23:

 

சூடாமல் வாலை யிருக்கிற தும்பரி
சித்த சிவனுக்குள் ளானதால்
வீடாமல் வாசிப் பழக்கத்தைப் பாருநாம்
மேல்வீடு காணலாம் வாலைப் பெண்ணே!

24:

 

மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
விளக்கில் நின்றவன் வாணியடி
தாய்வீடு கண்டவன் ஞானியடிபரி
தாண்டிக் கொண்டான்பட் டாணியடி.

25:

 

அத்தியி லேகரம் பத்தியி லேமனம்
புத்தியி லேநடு மத்தியிலே
நெற்றி சதாசிவ மென்றுசொன் னேனுன்றன்
நிலைமையைப் பாரடி வாலைப் பெண்ணே!

26:

 

அழுத்தி லேசொல்லஞ் செழுத்தி லேநானும்
வழுத்தி னேன்ஞானப் பழத்திலே
கழுத்தி லேமயேஸ் வரனு முண்டுகண்
கண்டு பாரடி வாலைப் பெண்ணே!

27:

 

அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சிய ரேநிதம்
கொஞ்சி விளையாடும் வஞ்சியரே!
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன்
நேருட னாமடி வாலைப் பெண்ணே!

28:

 

தொந்தியி லேநடுப் பந்தியி லேதிடச்
சிந்தையிலே முந்தி யுன்றனுடன்
உந்தியில் விண்ணுவுந் தாமிருப் பாரிதை
உண்மையாய்ப் பாரடி வாலைப் பெண்ணே!

29:

 

ஆலத்தி லேயிந்த ஞாலத்தி லேவருங்
காலத்தி லேயனு கூலத்திலே
மூலத்தி லேப்ரமன் தானிருந் துவாசி
முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே.

30:

 

தேருமுண்டு ஐந்நூறும் ஆணியுண் டேஅதில்
தேவரு முண்டுசங் கீதமுண்டே
ஆருண்டு பாரடி வாலைத் தெய் வம்மதில்
அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!

31:

 

ஒன்பது வாயில்கொள் கோட்டையுண் டேஅதில்
உள்ளே நிலைக்கார ரஞ்சுபேராம்;
அன்புட னேபரி காரர்க ளாறுபேர்
அடக்கந் தானடி வாலைப் பெண்ணே!

32:

 

இந்த விதத்திலே தேகத்தி லேதெய்வம்
இருக்கையில் புத்திக்க றிக்கையினால்
சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
சாகிறதேதடி வாலைப் பெண்ணே!

33:

 

நகார திட்டிப்பே ஆன தினால் வீடு
வான வகார நயமாச்சு;
உகார முச்சி சிரசாச் சேஇதை
உற்றுப் பாரடி வாலைப் பெண்ணே!

34:

 

வகார மானதே ஓசையாச் சேஅந்த
மகார மானது கர்ப்பமாச்சே;
சிகார மானது மாய்கையாச் சேஇதைத்
தெளிந்து பாரடி வாலைப் பெண்ணே!

35:

 

ஓமென்ற அட்சரந் தானுமுண் டதற்குள்
ஊமை யெழுத்து மிருக்குதடி;
நாமிந்தெ ழுத்தை யறிந்து கொண் டோம்வினை
நாடிப் பாரடி வாலைப் பெண்ணே!

36:

 

கட்டாத காளையைக் கட்டவே ணுமாசை
வெட்டவே ணும்வாசி யொட்டவேணும்
எட்டாத கொம்பை வளைக்கவே ணுங்காய
மென்றைக்கி ருக்குமோ வாலைப் பெண்ணே!

37:

 

இருந்த மார்க்கமாய்த் தானிருந்து வாசி
ஏற்காம லேதான டக்கவேணும்;
திரிந்தே ஓடி யலைந்துவெந் துதேகம்
இறந்து போச்சுதே வாலைப் பெண்ணே!

38:

 

பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
பூவில்லாப் பிஞ்சும் அனேகமுண்டு
மூத்த மகனாலே வாழ்வுமுண் டுமற்ற
மூன்றுபே ராலே அழிவுமுண்டு!

39:

 

கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற
கற்பை யளித்தவ ரேவாழ்க!
சிற்பர னைப்போற்றிக் கும்மிய டிகுரு
தற்பர னைப்போற்றிக் கும்மியடி.

40:

 

அஞ்சி னிலேரண்டழிந்ததில் லையஞ்
சாறிலே யுநாலொ ழிந்ததில்லை;
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவ தாம்அது
பேணிப் போடலாம் வாலைப் பெண்ணே!

41:

 

கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட் டானிரு
காலில்லா நெட்டையன் முட்டிக் கிட்டான்;
ஈயில்லாத் தேனெடுத் துண்டுவிட் டானது
இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே!

42:

 

மேலூரு கோட்டைக்கே ஆதர வாய்நன்றாய்
விளங்கு கன்னனூர்ப் பாதையிலே
காலூரு வம்பலம் விட்டத னாலது
கடுந டையடி வாலைப் பெண்ணே!

43:

 

தொண்டையுள் முக்கோணக் கோட்டையி லேயிதில்
தொத்திக் கொடிமரம் நாட்டையிலே
சண்டைசெய் துவந்தே ஓடிப்போ னாள்கோட்டை
வெந்து தணலாச்சு வாலைப் பெண்ணே!

44:

 

ஆசை வலைக்குள் அகப்பட்ட தும்வீட
அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
பாச வலைவந்து மூடிய தும்வாலை
பாதத்தைப் போற்றடி வாலைப் பெண்ணே!

45:

 

அன்ன மிருக்குது மண்டபத் தில்விளை
யாடித் திரிந்ததே ஆண்புலியும்
இன்ன மிருக்குமே யஞ்சுகி ளியவை
எட்டிப் பிடிக்குமே மூன்று கிளி;

46:

 

தோப்பிலே மாங்குயில் கூப்பிடு தேபுது
மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும்
ஏய்க்கு மிப்படி யஞ்சா றாந்தை
இருந்து விழிப்பது பாருங்கடி.

47:

 

மீனு மிருக்குது தூரணி யிலிதை
மேய்ந்து திரியுங் கலசா வல்;
தேனு மிருக்குது போரையிலே யுண்ணத்
தெவிட்டு தில்லையே வாலைப் பெண்ணே!

48:

 

காகமிருக்குது கொம்பிலே தான்கத
சாவ லிருக்குது தெம்பிலேதான்;
பார்க்க வெகுதூர மில்லை யிதுஞானம்
பார்த்ததால் தெரியுமே வாலைப் பெண்ணே!

49:

 

கும்பிக் குளத்திலே யம்பல மாமந்தக்
குளக்க ருவூரில் சேறு மெத்த;
தெம்பி லிடைக்காட்டுப் பாதைக ளாய் வந்து
சேர்ந் தாராய்ந்துபார் வாலைப் பெண்ணே!

50:

 

பண்டுமே ஆழக் கிணற்றுக்குள் ளேரண்டு
கெண்டை யிருந்து பகட்டுதடி;
கண்டிருந் துமந்தக் காக்கையு மேயஞ்சி
கழுகு கொன்றது பாருங்கடி!

51:

 

ஆற்றிலே யஞ்சு முதலைய டியரும்
புற்றிலே ரண்டு கரடியடி;
கூற்றனு மூன்று குருடன டிபாசங்
கொண்டு பிடிக்கிறான் வாலைப் பெண்ணே!

52:

 

முட்டை யிடுகு தொருபற வைமுட்டை
மோசம் பண்ணு தொருபறவை;
வட்டமிட் டாரூர் கண் ணியிலி ரண்டு
மானுந் தவிக்குது வாலைப் பெண்ணே!

53:

 

அட்டமா வின்வட்டம் பொட்டலி லேரண்டு
அம்புலி நிற்குது தேர்மேலே;
திட்டமாய் வந்து அடிக்குதில் லைதேகம்
செந்தண லானதே வாலைப் பெண்ணே!

54:

 

முக்கோண வட்டக் கிணற்றுக்குள் ளேமூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் தில்வாலை
அமர்ந்தி ருக்கிறாள் வாலைப் பெண்ணே!

55:

 

இரண்டு காலாலொரு கோபுர மாம்நெடு
நாளா யிருந்தே அமிழ்ந்து போகும்;
கண்டபோ துகோபு ரமிருக் கும்வாலை
காணவு மெட்டாள் நிலைக்கவொட்டாள்.

56:

 

அஞ்சு பூதத்தை யுண்டுபண் ணிக் கூட்டில்
ஆறா தாரத்தை யுண்டு பண்ணிக்
கொஞ்ச பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை
கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்.

57:

 

காலனைக் காலா லுதைத்த வளாம்வாலை
ஆலகா லவிட முண்டவளாம்;
மாளாச் செகத்தைப் படைத்தவ ளாமிந்த
மானுடன் கோட்டை இடித்தவளாம்.

58:

 

மாதாவாய் வந்தே அமுதந்தந் தாள்மனை
யாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்
ஆதர வாகிய தங்கையா னாள்நமக்
காசைக் கொழுந்தியு மாமியானாள்.

59:

 

சிரித்து மெல்லப் புரமெரித் தாள்வாலை
செங்காட்டுச் செட்டியைத்தா னுதைத்தாள்;
ஒருத்தியாகவே சூரர்த மைவென்றாள்
ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்.

60:

 

இப்படி யல்லோ இவள் தொழி லாமிந்த
ஈனா மலடி கொடுஞ்சூலி;
மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
வயசு வாலை திரிசூலி.

61:

 

கத்தி பெரியதோ யுறைபெரி தோவிவள்
கண்ணு பெரிதோ முகம் பெரிதோ?
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான்
சற்றே சொல்லடி வாலைப் பெண்ணே!

62:

 

அன்னம் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
அப்படி வாலை பெரிதானால்
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி

63:

 

மாமிச மானா லெலும்புமுண் டுசதை
வாங்கி ஓடு கழன்றுவிடும்;
ஆமிச மிப்படிச் சத்தியென் றேவிளை
யாடிக் கும்மி அடியுங்கடி.

64:

 

பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதென்று
கண்டுகொண் டுமுன்னே அவ்வைசொன் னாளது
வுண்டோ வில்லையோ வாலைப் பெண்ணே!

65:

 

மண்ணுமில் லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
வாசமில் லாமலே பூவுமில்லை;
பெண்ணுமில்லாமலே யாணுமில் லையிது
பேணிப்பாரடி வாலைப் பெண்ணே!

66:

 

நந்தவனத்திலே சோதியுண் டுநிலம்
நித்திய பேருக்கு நெல்லுமுண்டு;
விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
விட்ட குறைவேணும் வாலைப் பெண்ணே!

67:

 

வாலையைப் பூசிக்கச் சித்தரா னார்வாலைக்
கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்;
வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத் தாரிந்த
விதந்தெ ரியுமோ வாலைப் பெண்ணே!

68:

 

வாலைக்கு மேலான தெய்வமில் லைமானங்
காப்பது சேலைக்கு மேலுமில்லை;
பாலுக்கு மேலான பாக்கியமில் லைவாலைக்
கும்மிக்கு மேலான பாடலில்லை.

69:

 

நாட்டத்தை கண்டா லறியலா குமந்த
நாலாறு வாசல் கடக்கலாகும்;
பூட்டைக் கதவைத் திறக்கலா கும்இது
பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே!

70:

 

ஆணும்பெண் ணும்கூடி யானதனாற் பிள்ளை
ஆச்சுதென் றேநீரும் பேசுகின்றீர்;
ஆணும்பெண் ணுங்கூடி யானதல் லோபேதம்
அற்றொரு வித்தாச்சு வாலைப் பெண்ணே!

71:

 

இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
என் வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே;
அன்றைக் கெழுத்தின் படிமுடி யும்வாலை
ஆத்தாளைப் போற்றடி வாலைப் பெண்ணே!

72:

 

வீணாசை கொண்டு திரியா தேயிது
மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண் டாற்காட்சி
காணலா மாகாய மாளலாமே.

73:

 

பெண்டாட்டி யாவதும் பொய்யல்ல வோபெற்ற
பிள்ளைக ளாவதும் பொய்யல்லவோ?
கொண்டாட்ட மான தகப்பன்பொய் யேமுலை
கொடுத்த தாயும் நிசமாமோ?

74:

 

தாயும் பெண் டாட்டியுந் தான்சரி யேதன்யம்
தாமே யிருவருந் தாங்கொடுத்தார்;
காயும் பழமுஞ் சரியா மோஉன்றன்
கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப் பெண்ணே!

75:

 

பெண்டாட்டி மந்தைமட்டும்வரு வாள்பெற்ற
பிள்ளை மசானக் கரையின் மட்டும்;
தெண்டாட்டுத் தர்மம் நடுவினி லேவந்து
சேர்ந்து பரகதி தான் கொடுக்கும்.

76:

 

பாக்கிய மும்மகள் போக்கிய மும்ராச
போக்கிய மும்வந்த தானாக்கால்
சீக்கிரந் தருமஞ் செய்யவேண் டுங்கொஞ்சத்
திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.

77:

 

திருப்பணி களைமு டித்தோ ருஞ்செத்துஞ்
சாகாத பேரி லொருவரென்றும்
அருட்பொ லிந்திடும் வேதத்தி லேயவை
அறிந்து சொன்னாளே வாலைப் பெண்ணே!

78:

 

மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
மெல்லிய ரோடு சிரிக்கும்போது
யுத்தகா லன்வந்து தான்பிடித் தால்நாமும்
செத்த சவமடி வாலைப் பெண்ணே!

79:

 

ஏழை பனாதிக ளில்லையென் றாலவர்க்
கிருந்தா லன்னங கொடுக்க வேண்டும்;
நாளையென் றுசொல்ல லாகா தேயென்று
நான்மறை வேத முழங்குதடி.

80:

 

பஞ்சை பனாதி யடியாதே யந்தப்
பாவந் தொலைய முடியாதே;
தஞ்சமென் றோரைக் கெடுக்கா தேயார்க்கும்
வஞ்சனை செய்ய நினையாதே.

81:

 

கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
காணாத வுத்தரம் விள்ளாதே;
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே.

82:

 

சிவன்ற னடியாரை வேதிய ரைச்சில
சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையா தேயவர்
மனத்தை நோகவும் செய்யாதே.

83:

 

வழக்க ழிவுகள் சொல்லா தேகற்பு
மங்கையர் மேல்மனம் வையாதே;
பழக்க வாசியைப் பார்த்துக்கொண் டுவாலை
பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே!

84:

 

கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
கொலைக ளவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை யடியா தேயிது
அறிவு தானடி வாலைப் பெண்ணே!

85:

 

காரிய னாகினும் வீரியம் பேசவும்
காணா தென்றவ்வை சொன்னாளே;
பாரினில் வம்புகள் செய்யா தேபுளிப்
பழம்போ லுதிர்ந்து விழுந்தானே.

86:

 

காசார் கள்பகை செய்யா தேநடுக்
காட்டுப் புலிமுன்னே நில்லாதே;
தேசாந்த ரங்களுஞ் செல்லா தேமாய்கைத்
தேவடி யாள்தனம் பண்ணாதே.

87:

 

தன்வீ டிருக்க அசல்வீடு போகாதே
தாயார் தகப்பனை வையாதே;
உன்வீட்டுக் குள்ளேயே யூக மிருக்கையில்
ஓடித் திரிகிறாய் வாலைப் பெண்ணே!

88:

 

சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு.

89:

 

பாலோடு முண்டிடு பூனையு முண்டது
மேலாக காணவுங் காண்பதில்லை;
மேலந்த வாசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்.

90:

 

கோழிக் கறுகாலுண் டென்றுசொன் னேன்கிழக்
கூனிக்கு மூன்றுகா லென்று சொன்னேன்;
கூனிக்கி ரண்டெழுத் தென்றுசொன் னேன்முழுப்
பானைக்கு வாயில்லை யென்று சொன்னேன்.

91:

 

ஆட்டுக் கிரண்டுகா லென்றுசொன் னேனம்
மானைக்குப் பானைக்கு நிற்குமேல் சூல்
மாட்டுக்குக் காலில்லை யென்றுசொன் னேன் கதை
வகையைச் சொல்லடி வாலைப் பெண்ணே!

92:

 

கோயிலு மாடும் பறித்தவ னுங்கன்றிக்
கூற்று மேகற் றிருந்தவனும்
வாயில்லாக் குதிரை கண்டவ னுமாட்டு
வகைதெ ரியுமோ வாலைப் பெண்ணே!

93:

 

இத்தனை சாத்திரந் தாம்படித் தோர்செத்தார்
என்றா லுலகத்தோர் தாம்சிரிப்பார்;
செத்துப்போய்க் கூடக் கலக்கவேண்டு மவன்
தேவர்க ளுடனே சேரவேண்டும்.

94:

 

உற்றது சொன்னக்கா லற்றது பொருந்தும்
உண்டோ உலகத்தி லவ்வைசொன்னாள்;
அற்றது பொருந்து முற்றது சொன்னவன்
அவனே குருவடி வாலைப் பெண்ணே!

95:

 

பூரண நிற்கும் நிலையறி யான்வெகு
பொய்சொல்வான் கோடிமந் திரஞ்சொல்வான்
காரண குருஅ வனுமல் லவிவன்
காரிய குருபொ ருள்பறிப்பான்.

96:

 

எல்லா மறிந்தவ ரென்றுசொல் லயிந்தப்
பூமியி லேமுழு ஞானியென்று
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
ஓடித் திரிகிறார் வாலைப் பெண்ணே!

97:

 

ஆதிவா லைபெரிதானா லும்அவள்
அக்காள் பெரிதோ சிவன்பெரிதோ!
நாதிவா லைபெரி தானா லும்அவள்
நாயக னல்ல சிவம்பெரிது.

98:

 

ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்
அண்டாது மற்ற வியாதியெல்லாம்
பேயும் பறந்திடும் பில்லிவினாடியில்
பத்தினி வாலைப்பெண் பேரைச் சொன்னால்.

99:

 

நித்திரை தன்னிலும் வீற்றிருப் பாளெந்த
நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்;
சத்துரு வந்தாலும் தள்ளிவைப் பாள்வாலை
உற்றகா லனையுந் தானுதைப்பாள்.

100:

 

பல்லாயி ரங்கோடி யண்டமு தல்பதி
னான்கு புவனமும் மூர்த்திமுதல்
எல்லாந் தானாய்ப் படைத்தவ ளாம்வாலை
எள்ளுக்கு ளெண்ணெய்போல் நின்றவளாம்.

101:

 

தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் மித்தமிழ்
செய்ய எனக்குப தேசஞ்செய்தாள்
நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
நீள் பதம் போற்றிக்கொண் டாடுங்கடி.

102:

 

ஆறு படைப்புகள் வீடு கடைசூத்ர
அஞ்செழுத் துக்கும் வகையறிந்து
கூறு முயர்வல வேந்த்ரன் துரைவள்ளல்
கொற்றவன் வாழக்கொண் டாடுங்கடி!

103:

 

ஆடுங்கள் பெண்டுக ளெல்லோ ருமந்த
அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்
பாடுங்கள் சித்தர்க ளெல்லோ ரும்வாலை
பரத்தைப் போற்றிக்கொண் டாடுங்கடி

104:

 

சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி
தேவர்கள் வாழி ரிஷிவாழி
பத்தர்கள் வாழி பதம்வா ழிகுரு
பாரதி வாலைப்பெண் வாழியவே!

சட்டை முனி ஞானம்

சட்டை முனி ஞானம்

ஞானம்

எண்சீர் விருத்தம்

1. காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்;
கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்
புகழாகப் பூசைசெய்வார் பெண்ணை வைத்தும்;
நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே
உத்தமனே! பூசைசெய்வார் சித்தர் தானே.

2. தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்;
தேனென்ற மேருவுக்குத் தீட்சை வேண்டும்:
சிறுபிள்ளை யாமொருவன் தீண்டப் போகா:
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தார்
வாய்திறந்தே உபதேசம் சொன்னா ராகிற்
கோனென்ற வாதசித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன்சீடன் கூறி னானே.

3. கூறியதோர் வாலையின்மூன் றெழுத்தைக் கேளாய்:
குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்;
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்:
மைந்தனே! இவளைநீ பூசை பண்ணத்
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்:
திறமாகப் புவனையை நீ பூசை பண்ணு:
ஆறியதோர் யாமளையா றெழுத்தைக் கேளாய்:
அவளுடைய பதம்போற்றிப் பூசை பண்ணே.

4. பண்ணியபின் யாமளையைந் தெழுத்தைக் கேளாய்:
பண்பாகத் தீட்சையைந்தும் முடிந்த பின்பு
வண்ணியதோர் வாசியென்ற யோகத் துக்கு
மைந்தனே வைத்துப்ராணா யாமந் தீரும்:
கண்ணியதோர் இத்தனையும் அறிந்தி ருத்தாற்
காயசித்தி விக்கினங்கள் இல்லை யில்லை;
உண்ணியதோர் உலகமென்ன சித்த ரென்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே!

சேஷ யோகியார்

ஞான ஏற்றம்

பிள்ளையாரும் வாரி
பிள்ளையாரும் அங்கே
பெருத்தமூலர் தாரஞ்
சிறுத்தஇதழ் நாலாம்
உரைத்தகம்ப மாகி
ஒங்கியுச்சி தொட்டுத்
தாங்கியதன் கீழாய்த்
தான் இரண்ட தாகித்
தங்கிவாயு வானால்
அங்குமே கடந்து
சங்கிலி பிளந்து
சமத்தவாயு வானால்
இங்கிது உரைத்தே
இரண்டுடனே வாரி
இன்னம் அதன் மேலே
வன்னமதைச் சொல்வேன்;
அன்னத்துக்கு ராசன்
அயன் சரஸ் வதியாம்;
நயந்த இதழ் ஆறாம்
நல்ல நிலம் பொன்னாம்
நகரமேயெ ழுத்தாம்
உகரங்கந்த மாகும்;
முத்திதந்த நாதா
மூன்றுடனே வாரி
மோசம்பண்ண மாயன்
வாசமணி பூரம்
நேசம் லட்சுமியாம்
வீசம்பத் திதழும்
ஓசைமவ்வெ ழுத்தாம்
தேசமே வெளுப்பாம்
ஆறுசுவை யாலே
நடுவேதேயு வீடாம்
நாலுடனே வாரி
நாலும்எட் டிதழும்
நல்ல செம்பு மேனி
எல்லைருத்தி ரனாம்
தொல்லைவிழிப் பார்வை
செல்லுமே சிகாரம்
அல்லல்உண்டே யின்னம்
அஞ்சுடனே வாரி
நெஞ்சில் அவ்வே ழுத்தாம்
கொஞ்சிய மயேசன்
மிஞ்சுமறு கோணம்
மேனிகறுப் பாமே
தன்னிதழைப் பார்க்கில்
தனியேபதி னாறாம்
முந்தவேலை யோடல்
அந்தரங்கஞ் சொல்வேன்
ஆறுடனே வாரி
கூறுவேனே நானும்
குருவிருந்த நேர்மை
அருகிருந்த பூசம்
அமைச்சல்லவோ அத்தான்!
என்னவென்று சொல்வேன்!
ஏழுடனே வாரி
தாழச்சொன்ன பேச்சுச்
சத்தியங்காண் அத்தான்!
ஏழைசொன்ன பேச்சு
எட்டுடனே வாரி
எட்டுச்சாண் உடம்பு!
கட்டையைநம் பாதே;
ஒன் றல்லவோ தெய்வம்;
ஒருபதியா லெட்டாம்
ஊமையெழுத் தாலே
ஓங்காரம்உண் டாச்சு:
ஓங்காரத்தி னாலே
உண்டாச்சுதே லோகம்:
இதுவுங்குரு வாலே
இருபதியா லெட்டாம்
இறைக்கிறரண் டேற்றம்
சுரக்குமேழை நாலாம்
முந்திகுரு பாதம்
முப்பதியா லெட்டாம்
முப்பாழுங் கடந்து
அப்பாலே நடந்தால்
அதிசயம்பார் அத்தான்!
நல்லகுரு பாதம்
நாற்பதியா லெட்டாம்
நாலுமூலைக் குண்டம்
நடுவெழுந்த தூணாம்
படுமுதல் இரண்டாம்
படுமுதல் பிடுங்கி
பருத்தமரம் ஏறிக்
குருத்தில்கள்ளி றக்கிக்
கூசாமற் குடித்தாற்
பேசாதே பிறகு
அஞ்சாதே நீ அத்தான்!
ஐம்பதியா லெட்டாம்
அஞ்சல்லவோ பூதம்?
பஞ்சல்லோவெ ழுத்து?
அஞ்சொடுங்கும் போது
நெஞ்சடங்கும் அத்தான்!
ஆறுமுக மல்லோ
அறுபதியா லெட்டாம்
ஆறல்லவோ தாரம்?
வேறெல்லோ சொரூபம்?
வேறறிந்த போக்குத் 
தூரமில்லை அத்தான்!
என்னவென்று சொல்வேன்
எழுபதியா லெட்டாம்
ஏழல்லவோ நாடி?
வாழின்பத்து நாடி
பாழல்லவோ நானும்?
பாழ்கடந்த பேர்க்குப்
பத்துக்கோடி தெண்டம்
என்னவென்று சொல்வேன்?
எண்பதியா லெட்டாம்
எண்ணிக்கை யறிந்து
கண்ணப்பனைக் கண்டு
திண்ணப்பா பழத்தைக்
குண்ணப்பா வறுமை.
விண்ணப்பம் உரைத்துச்
சண்ணப்பா குருவை
சொன்னதப சாரம்
தொண்ணூறுடன் எட்டாம்
மண்ணில்வெகு தூரம்
குண்ணறிந்த பேரை
எண்ணறிந்தே வாடி
ஏகமன மாகிப்
பாரமும் அறிந்து
நாகத்தை யெழுப்பிப்
பீசத்தைத் துறந்து
யோகத்தை நடத்திப்
போகத்தைக் கடந்தால்
தாகத்தை நிறுத்தும்:
சோதியறிந் தோர்க்குத்
தூரமில்லை அத்தான்!
சாதிகுல மில்லை
சற்குருவ றிந்தால்;
நித்தியம் இதுவே;
பத்தியாய்ப் பணிந்தால்
முத்திதரும் அத்தான்!
வாமநெறி சீவன்
ராமயோகி தந்த
ராசயோகி சேடன்
தாசன் அரு ளாலே
பாசமறச் சொன்னேன்
பிரியாமலே அத்தான்
பிள்ளையாரும் வாரி.

ஞான ஏற்றம் முற்றும்


அகத்தியர் கூறும் கர்ம வினை

அகத்தியர் கூறும் கர்ம வினை?

விதியைப் பற்றியும், கர்மவினை பற்றியும் உலகம் முழுவதும் பரவலான நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகின்றது.''

சித்தர் அகத்தியர் பெருமான் இயற்றிய பல லட்சம் பாடல்களில்
"அகத்தியர் கன்ம காண்டம் -300" என்ற சிறப்பு வாய்ந்த நூலில் எந்த வித கர்ம வினையினால் என்னென்ன நோய்கள் தோன்றும் என மிகத்தெளிவாக விளக்கமளிக்கின்றார்.

ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத பாபத்தால் "ஈளை நோய்" வரும். [ ஈளை, இளைப்பு, ஆஸ்த்மா ]

பசுமையாய் வளர்ந்த இளம் செடி,கொடிகளை வெட்டுவதும்,சிறு பூச்சிகளின் கை, கால்களை வெட்டினால் "வாதநோய் - பக்கவாதம்" வரும்.
பிறர் குடியை கெடுத்தல்,நல்லோர் மனதை நோகச் செய்தல், பிறர் பசியில் இருக்க அவர் பார்வையில் தான் உணவு உண்டால் வரும் நோய் "குன்மநோய் எட்டு" அதாவது அல்சர், குடற் புண்
,இதில் எட்டு வகை நோய் வரும்.[இன்று ஏராளமான பேருக்கு இந்நோய் உள்ளது]

மலராத அரும்பு பூக்களை கொய்தல், நந்தவனம் அழித்தல், பெற்றோர் மனம் நோகச் செய்தல் இதனால் "குஷ்ட நோய்" வரும்.

ஊர்ந்து செல்லும் சிறு விலங்குகள்,பறவைகள் போன்றவைகளைக் கொன்றால் வரும் நோய் "வலிப்பு நோய்" ஆகும்.

பிஞ்சு காய்கறிகள், இலை தழை பறித்தல்,பட்டை வெட்டுதல்,வேர் மற்றும் கொடிகள் வெட்டுவதால் பீனிசம்,[சைனஸ்],"ஒற்றைத் தலை வலி, மண்டைக்குத்து, மண்டைக் கரப்பான்" போன்ற நோய்கள் வரும்.

இளம் பயிரை அழித்தல், விந்து அழித்தல், கன்றுக்குரிய பாலைக் குடித்தல்,இதனால் "குழந்தையின்மை" குழந்தை பிறக்காது.

வீண் வம்பு பேசுதல், பிறரைப் பழித்தல், பொய் பேசல், ஆங்காரம் , ஆணவம் போன்ற வற்றால் "சோகை ,பாண்டு" [இரத்த சோகை, கல்லீரல் மண்ணீரல் வீக்கம்] நோய் வரும்.

உயிர்களை வதைத்தல்,ஊன் தின்னல், நன் மங்கையரைக் கற்பழித்தல், பிறர் செய்யும் புண்ணிய காரியங்களைக் கெடுத்தல், குடிநீரைக் கெடுத்தல் போன்றவற்றால் "கிராணி, கழிச்சல்",[சீத பேதி] நோய் வரும்.

பொய் மிக பேசல், பிறரை திட்டுதல், வஞ்சகம் பேசுதல்,கொடுத்த வாக்கை மறுத்தல், விஷமிடல் போன்றவற்றால் "கண், கன்னம், வாய்" பல் போன்றவற்றில் பல வகை நோய் வரும்.

சற்குருவை தூற்றுதல், வழியிலே முள்ளிட்டு வைத்தல் இவற்றால் "வண்டுகடி, ஊறல், கரப்பான்" நோய் வரும்.

வெடி வைத்தல், கல்லெறிதல், சிவ யோகிக்கு சினம் உண்டாக்குதல் இதனால் பிளவை எனும் "இராஜபிளவை" முதுகு தண்டில் வரும்.

பெண்களை மோகக்கண் கொண்டு, காம எண்ணத்துடன் உற்றுப் பார்த்தல்,கோழி ,ஆடு போன்றவற்றை வெட்டும் போது பார்த்தல், ஆலயம் செல்ல விரும்பாமை, தெய்வ நிந்தனை போன்றவற்றால் "கண்நோய் 96" - வகைகள் தோன்றும்.

கர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம்
இனியாவது வினைகளை சேர்க்காமல் வாழ்வோம்

சித்தர்களின் பட்டியல்

 

 சித்தர்களின் பட்டியல்

       

1        அக்கா சுவாமிகள்

2        அருணகிரிநாதர்

3        அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்

4        அழகண்ண சித்தர்

5        அழகர் சுவாமிகள்

6        இராமதேவர்

7        உரோமரிசி

8        ஒடுக்கத்தூர் சுவாமிகள்

9        கண்ணப்ப நாயனார்

10        கதிர்வேல் சுவாமிகள்

11        கம்பர்

12        கம்பளி ஞானதேசிக சுவாமிகள்

13        கமல முனி

14        கன்னிச் சித்தர்

15        காகபுசுண்டர்

16        காசிபர்

17        காடுவெளி சித்தர்

18        குகை நாச்சியார் மகான்

19        குதம்ப்பைச் சித்தர்

20        குமரகுருபரர்

21        குமாரசாமி சித்தர் சுவாமிகள்

22        குரு பாபா ராம்தேவ்

23        குழந்தையானந்த சுவாமிகள்

24        கோட்டூர் சுவாமிகள்

25        கௌதமர்

26        சக்திவேல் பரமானந்த குரு

27        சதாசிவப் பிரம்மேந்திரர்

28        சதுர்முக சுரேஸ்வர சித்தர்,

29        சந்திரானந்தர்

30        சாந்த நந்த சுவாமிகள்

31        சித்தானந்த சுவாமிகள்

32        சிவஞான பாலசித்தர்

33        சிவஞான பாலைய சுவாமிகள்

34        சிவப்பிரகாச அடிகள்

35        சிறுதொண்டை நாயனார்

36        சுந்தரர்

37        சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்

38        சுப்பிரமணிய சித்தர்

39        சென்னிமலை சித்தர்

40        சேக்கிழார் பெருமான்

41        சேடயோகியார்

42        ஞானகுரு குள்ளச்சாமிகள்

43        ஞானானந்த சுவாமிகள்

44        தகப்பன் மகன் சமாதி

45        தம்பிக்கலையான் சித்தர்

46        தயானந்த சுவாமிகள்

47        தன்வந்தரி

48        தஷிணாமூர்த்தி சுவாமிகள்

49        திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,

50        திரி மதுர நீற்று முனீஸ்வரர்

51        திருமூலம் நோக்க சித்தர்

52        நடன கோபால நாயகி சுவாமிகள்

53        நந்தி சித்தர்

54        நாகலிங்க சுவாமிகள்

55        நாரதர்

56        நாராயண சாமி அய்யா

57        பகவந்த சுவாமிகள்

58        பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்

59        பட்டினத்தார்

60        பதஞ்சலி சித்தர்

61        பரமஹம்ச யோகானந்தர்

62        பரமாச்சாரியார்

63        பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்

64        பாம்பன் சுவாமிகள்

65        புண்ணாக்கீசர்

66        புலத்தியர்

67        பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி

68        பெரியாழ்வார் சுவாமிகள்

69        போதேந்திர சுவாமிகள்

70        மகான் படே சுவாமிகள்

71        மண்ணுருட்டி சுவாமிகள்

72        மாயம்மா

73        மார்க்கண்டேயர்

74        முத்து வடுகநாதர்

75        மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்

76        மௌன சாமி சித்தர்

77        யுக்தேஸ்வரர்

78        யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்)

79        ரமண மகரிஷி

80        ராகவேந்திரர்

81        ராணி சென்னம்மாள்

82        ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்

83        ராமானுஜர்

84        ரெட்டியபட்டி சாமிகள்

85        லஷ்மண சுவாமிகள்

86        வரதர்

87        வல்லநாட்டு மகாசித்தர்

88        வள்ளலார்

89        வன்மீக நாதர்

90        வான்மீகி

91        விசுவாமித்திரர்

92        வேதாந்த சுவாமிகள்

93        ஜட்ஜ் சுவாமிகள்

94        ஜமதக்கினி

95        ஷீரடி சாயிபாபா

96        ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,

97        ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்

98        அகத்தியர்

99        அகத்தியர்

100        அகப்பேய் சித்தர்

101        அழுகண்ணச் சித்தர்

102        அறிவானந்தர்

103        இடைக்காட்டுச் சித்தர்

104        இடைக்காட்டு சித்தர்

105        இராமதேவ சித்தர்

106        இராமலிங்க சுவாமிகள்

107        இராம தேவர்

108        உரோமரிஷி

109        எனாதிச் சித்தர்

110        கடுவெளிச் சித்தர்

111        கணபதி தாசர்

112        கமல முனி

113        கருவூர்சித்தர்

114        கருவூரார்

115        காக புசுண்டர்

116        காரைச் சித்தர்

117        காளங்கி நாதர்

118        காளங்கி நாதர்

119        காளைச் சித்தர்

120        குடைச் சித்தர்

121        குதம்பைச் சித்தர்

122        கைலயக் கம்பளிச் சட்டை முனி

123        கொங்கணர்

124        கொங்கண சித்தர்

125        கோரக்கர்

126        கோரக்கர்

127        சட்டைமுனி

128        சட்டை முனி்

129        சண்டேசர்

130        சிவவாக்கியர்

131        சிவவாக்கியர்

132        சுந்தரானந்தர்

133        சூரியானந்தர்

134        சூரியானந்தர்

135        சோதி முனி

136        டமரகர்

137        தன்வந்திரி

138        திருமூலர்

139        திருமூலர்

140        தேரையர்

141        தேரையர்

142        நந்தீசர்

143        பட்டினத்தார்

144        பத்திரகிரியார்

145        பதஞ்சலியார்

146        பாம்பாட்டி சித்தர்

147        பாம்பாட்டி சித்தர்

148        பீரு முகமது

149        புண்ணாக்கீசர்

150        புலத்தியர்

151        புலிக் கையீசர்

152        புலிப்பாணி

153        புலிப்பாணி

154        பூகண்டம்

155        பூரணானந்தர்

156        பூனைக் கண்ணர்

157        போகர்

158        மச்சமுனி

159        மச்ச முனி

160        மதுரை வாலைச் சாமி

161        வரரிஷி

162        வல்லப சித்தர்

163        வாம தேவர்

164        வாலைகுருசுவாமி

165        வான்மீகர்

166        வியாசர்

167        கடையிற் சுவாமிகள்

168        சித்தானைக்குட்டி சுவாமிகள்

169        சிவயோக சுவாமி

170        சிவாச் சித்தர்

171        செல்லப்பா சுவாமி்

172        பரமகுரு சுவாமிகள்

173        பெரியானைக்குட்டி சுவாமிகள்

174        யாழ்ப்பாணத்துச் சுவாமி