சித்தர்களின் பட்டியல்

 

 சித்தர்களின் பட்டியல்

       

1        அக்கா சுவாமிகள்

2        அருணகிரிநாதர்

3        அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்

4        அழகண்ண சித்தர்

5        அழகர் சுவாமிகள்

6        இராமதேவர்

7        உரோமரிசி

8        ஒடுக்கத்தூர் சுவாமிகள்

9        கண்ணப்ப நாயனார்

10        கதிர்வேல் சுவாமிகள்

11        கம்பர்

12        கம்பளி ஞானதேசிக சுவாமிகள்

13        கமல முனி

14        கன்னிச் சித்தர்

15        காகபுசுண்டர்

16        காசிபர்

17        காடுவெளி சித்தர்

18        குகை நாச்சியார் மகான்

19        குதம்ப்பைச் சித்தர்

20        குமரகுருபரர்

21        குமாரசாமி சித்தர் சுவாமிகள்

22        குரு பாபா ராம்தேவ்

23        குழந்தையானந்த சுவாமிகள்

24        கோட்டூர் சுவாமிகள்

25        கௌதமர்

26        சக்திவேல் பரமானந்த குரு

27        சதாசிவப் பிரம்மேந்திரர்

28        சதுர்முக சுரேஸ்வர சித்தர்,

29        சந்திரானந்தர்

30        சாந்த நந்த சுவாமிகள்

31        சித்தானந்த சுவாமிகள்

32        சிவஞான பாலசித்தர்

33        சிவஞான பாலைய சுவாமிகள்

34        சிவப்பிரகாச அடிகள்

35        சிறுதொண்டை நாயனார்

36        சுந்தரர்

37        சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்

38        சுப்பிரமணிய சித்தர்

39        சென்னிமலை சித்தர்

40        சேக்கிழார் பெருமான்

41        சேடயோகியார்

42        ஞானகுரு குள்ளச்சாமிகள்

43        ஞானானந்த சுவாமிகள்

44        தகப்பன் மகன் சமாதி

45        தம்பிக்கலையான் சித்தர்

46        தயானந்த சுவாமிகள்

47        தன்வந்தரி

48        தஷிணாமூர்த்தி சுவாமிகள்

49        திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,

50        திரி மதுர நீற்று முனீஸ்வரர்

51        திருமூலம் நோக்க சித்தர்

52        நடன கோபால நாயகி சுவாமிகள்

53        நந்தி சித்தர்

54        நாகலிங்க சுவாமிகள்

55        நாரதர்

56        நாராயண சாமி அய்யா

57        பகவந்த சுவாமிகள்

58        பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்

59        பட்டினத்தார்

60        பதஞ்சலி சித்தர்

61        பரமஹம்ச யோகானந்தர்

62        பரமாச்சாரியார்

63        பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்

64        பாம்பன் சுவாமிகள்

65        புண்ணாக்கீசர்

66        புலத்தியர்

67        பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி

68        பெரியாழ்வார் சுவாமிகள்

69        போதேந்திர சுவாமிகள்

70        மகான் படே சுவாமிகள்

71        மண்ணுருட்டி சுவாமிகள்

72        மாயம்மா

73        மார்க்கண்டேயர்

74        முத்து வடுகநாதர்

75        மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்

76        மௌன சாமி சித்தர்

77        யுக்தேஸ்வரர்

78        யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்)

79        ரமண மகரிஷி

80        ராகவேந்திரர்

81        ராணி சென்னம்மாள்

82        ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்

83        ராமானுஜர்

84        ரெட்டியபட்டி சாமிகள்

85        லஷ்மண சுவாமிகள்

86        வரதர்

87        வல்லநாட்டு மகாசித்தர்

88        வள்ளலார்

89        வன்மீக நாதர்

90        வான்மீகி

91        விசுவாமித்திரர்

92        வேதாந்த சுவாமிகள்

93        ஜட்ஜ் சுவாமிகள்

94        ஜமதக்கினி

95        ஷீரடி சாயிபாபா

96        ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,

97        ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்

98        அகத்தியர்

99        அகத்தியர்

100        அகப்பேய் சித்தர்

101        அழுகண்ணச் சித்தர்

102        அறிவானந்தர்

103        இடைக்காட்டுச் சித்தர்

104        இடைக்காட்டு சித்தர்

105        இராமதேவ சித்தர்

106        இராமலிங்க சுவாமிகள்

107        இராம தேவர்

108        உரோமரிஷி

109        எனாதிச் சித்தர்

110        கடுவெளிச் சித்தர்

111        கணபதி தாசர்

112        கமல முனி

113        கருவூர்சித்தர்

114        கருவூரார்

115        காக புசுண்டர்

116        காரைச் சித்தர்

117        காளங்கி நாதர்

118        காளங்கி நாதர்

119        காளைச் சித்தர்

120        குடைச் சித்தர்

121        குதம்பைச் சித்தர்

122        கைலயக் கம்பளிச் சட்டை முனி

123        கொங்கணர்

124        கொங்கண சித்தர்

125        கோரக்கர்

126        கோரக்கர்

127        சட்டைமுனி

128        சட்டை முனி்

129        சண்டேசர்

130        சிவவாக்கியர்

131        சிவவாக்கியர்

132        சுந்தரானந்தர்

133        சூரியானந்தர்

134        சூரியானந்தர்

135        சோதி முனி

136        டமரகர்

137        தன்வந்திரி

138        திருமூலர்

139        திருமூலர்

140        தேரையர்

141        தேரையர்

142        நந்தீசர்

143        பட்டினத்தார்

144        பத்திரகிரியார்

145        பதஞ்சலியார்

146        பாம்பாட்டி சித்தர்

147        பாம்பாட்டி சித்தர்

148        பீரு முகமது

149        புண்ணாக்கீசர்

150        புலத்தியர்

151        புலிக் கையீசர்

152        புலிப்பாணி

153        புலிப்பாணி

154        பூகண்டம்

155        பூரணானந்தர்

156        பூனைக் கண்ணர்

157        போகர்

158        மச்சமுனி

159        மச்ச முனி

160        மதுரை வாலைச் சாமி

161        வரரிஷி

162        வல்லப சித்தர்

163        வாம தேவர்

164        வாலைகுருசுவாமி

165        வான்மீகர்

166        வியாசர்

167        கடையிற் சுவாமிகள்

168        சித்தானைக்குட்டி சுவாமிகள்

169        சிவயோக சுவாமி

170        சிவாச் சித்தர்

171        செல்லப்பா சுவாமி்

172        பரமகுரு சுவாமிகள்

173        பெரியானைக்குட்டி சுவாமிகள்

174        யாழ்ப்பாணத்துச் சுவாமி

சூரியானந்தர்

சூரியானந்தர் ஒரு சித்தர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்டவை இரண்டு நூல்கள். சூரியானந்தர் பதின்மூன்று, சூரியானந்தர் இருபத்தைந்து என்பன அவை. இரண்டும் இரசவாதம் பற்றிக் கூறுகின்றன. உடல் உறுப்புகளால் செய்யப்படும் பயிற்சிகளை இவர் ‘தீட்சை’ என்கிறார். உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மை செய்வதை இவர் ‘சவுக்காரம்’ என்று குறிப்பிடுகிறார். பாடல் எடுத்துக்காட்டு சொல்வது என்ன ரேசகத்தை வெளிவிடாதே துடியான பூரகத்தைப் பின்னிடாதே வெல்வது என்ன கும்பகத்தை அடிவிடாதே மேலேற்று மாத்திரையை மறந்திடாதே செல்வது என்ன கற்பகத்தை மறந்திடாதே செந்தூரம் சேர்க்கையிலே சிதறிடாதே கொல்வது என்ன அமுர்து அயிலே பறக்கும் இந்த குளிகைக்குச் சாரணை செய் குணமும் மாற்றே


சூத்திரம்

1. சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற
தெட்சிணா மூர்த்தியுடைய பாதங் காப்பு:
பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன் றுக்குள்
பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை யெல்லாம்
நீர்கொண்ட வூசரத்தின் மகிமை தன்னை
நிசமாகச் சொல்லாமல் மறந்து விட்டார்
ஆர்கொண்ட வேணியனா ருமக்குச் சொன்னார்
ஆத்தாளு மடியேனுக் கறைந்திட்டாளே.

2. அறைந்திட்ட வகையேது வுப்பே ஆதி
ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம்
மறைந்திட்ட வுப்பதுவே காரங் காரம்
மண்ணான வுப்பதுவே சாரஞ் சாரம்
கறைந்திட்ட வூசருக்குக் கேற்ற வுப்பைக்
காணாமற் போனதினாற் கலக்க மாச்சு
இறைந்திட்ட மலசலமாய்க் காணலாகும்
இந்தவிரண் டோரிடத்தி லிருக்கும் பாரே.

3. இருக்கின்ற வுப்பினுக்கு மூலா தாரம்
இந்துவொன் றிரவியொன்று வன்னி யொன்று
பெருக்கின்ற வீசனுக்குச் சூட்ச முந்தான்
பிருதிவியே தூலமெனப் பேச லாகும்
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம்
கருதையிலே யெழுதோற்றங் காண லாகும்
உருக்கொண்ட சீவசெந்தும் அனேக முண்டாம்
உற்றுப்பா ரண்டபிண்ட முண்மை தானே.

4. தானாக நின்றதுவே பாரு மாச்சு
சகலசித்துப் பிரகிருதி யுயிரு மாச்சு
வானாகி நின்றதுவே சாட்சி யாகும்
மன்னுயிரெல் லாஞ்சோதி மயமுமாச்சு
ஊனாகப் பிறந்தசடம் பிறவா முத்திக்
குதவியல்லோ பிரகிருதி யோனி யோனி
கோனாக நின்றகுரு வுபதே சத்தாற்
குருபுகுந்தே யுப்பெடுத்துக் கொள்ளுவாயே.

5. கொள்ளுவார் முப்பூவின் முதலா மங்கம்
கூர்ந்துபா ரூசரத்தைக் கொள்கிக் கொண்டு
விள்ளுவார் யோனியின் படிவி டாமல்
மேலேற்ற மேலுதவி மேவிற் றானால்
துள்ளுவா ரிந்துப்புச் சிவமு மாச்சு
துருசுப்புப் பணவிடையாற் றொந்த மேற்றித்
தள்ளுவார் பிரளயமோர் கோடி காலம்
சகலசித்தும் மூலவுப்புத் தன்னி லாச்சே.

6. ஆச்சப்பா மூலவுப்புக் கஞ்சு தீட்சை
ஆதியுப்புக் கப்படியே தீட்சை யாகும்?
மூச்சப்பா தசதீட்சை யார்தான் செய்வார்?
மூலகுரு செய்வார்பின் னார்தான் செய்தார்?
ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம்
ஏற்றிவிட்டார் முப்பத்தி ரண்டா மென்று
பேச்சப்பா பேசினதி லாவ துண்டோ
பிண்டவுப்புக் கேழுவிதம் பேச லாமே.

7. பேசுகின்ற வுப்பினுக்கு மேலே அங்கம்
பெருமையுள்ள சித்தர்கள் தாம் செய்யும் மார்க்கம்
வீசுகின்ற சூதத்தின் துறைக ளெல்லாம்
மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சா னாலும்
பாசையினாற் சொன்னார்கள் வெளிதோன் றாது
பாலனுக்குந் தோன்றுமிந்த நூலை பார்த்தால்
கூசல்மிஞ்சிப் போடுதென்று என்றன் நூலைக்
குகைக்குள் மறைத் திட்டதனாற் கூறொண் ணாதே.

8. ஒண்ணான நூலாகு மிருநூற் றைந்தில்
ஓதிவைத்த கருத்தெரியு மிருபத் தைந்திற்
கண்ணாகு மிந்த நூல் பதின்மூன் றுக்குள்
கருவையொரு கற்பமுறை காட்டி வைத்தேன்
வண்ணானை யறியாத பேருக் கெல்லாம்
வாதியென்ற பேரேது வாத மேது?
பெண்ணாணின் சுரோணிதமும் விந்துங் கண்டால்
பேரான பூரணத்தின் பெருமை தானே.

9. பெருமையென்ற காயசித்தி பண்ணா விட்டாற்
பேரான அடியோடு முடியும் போச்சு
அருமையென்ற குண்டலிக்குள் வராகி பூசை
அப்பனே கண்டமதி லங்கெண் றூணு
புருவமையத் துள்ளேவும் மென்று கும்பி
போதமென்ற மவுன வித்தை கைக்குள் ளாச்சு
தருமவித்தை பிரகிருதி மூச்சா டாது
சகத்திரத்தெண் மலர்ப்பதத்திற் சார்ந்து நில்லே.

10. நில்லாத மூலிகையாற் காய சித்தி
நிட்டைமவு னத்தாலே யோக சித்தி
கொல்லாத மூலமதில் அபான சுத்தி
கூடாம லிருந்துவிட்டா லேது முத்தி?
சொல்லாத வீசனுப்பு மதிசூ தத்திற்
சூட்டினேன் வெள்ளை யென்ற சூடன் வித்தை
எல்லாரு மிருந்தவிதம் பாட மாட்டார்
இதமான சூதகத்தின் வெடியுப் பாச்சே.

11. உப்பான வெடியுப்புச் செயநீ ராலே
ஒருகோடி வித்தையெல்லா மாட லாகும்
அப்பான கல்லுப்பு நீரி னாலே
ஆடலாந் துருசினுடை அங்க மெல்லாம்
செப்பாத யோனிருது செந்நீர் மட்டாற்
சிவன் வேறு தானுண்டேயிவனல் லாமல்
தப்பாமற் செய்தென்ன சவுக்கா ரந்தான்
சட்டிமுதற் பவுரணையுந் தாக்கிப் பாரே.

12. தாக்கிப்பா ராகாசஞ் சருவ சாட்சி
சதாநித்தம் அந்தரமே சாடி நின்றால்
நோக்கிப்பார் வாயுலயப் படுவ தற்கு
நூதனமாய் வன்னியதிற் கூட வேணும்
மூக்கிற்றா னோடுவது பிராண வாயு
மூலமெனும் வளையமது நகாரந் தன்னைத்
தூக்கித்தான் விட்டவர்க்கு யோக மெய்தும்
சூரிய னந்தனிவை சொல்லும் நூலே.

13. சொல்வதென்ன ரேசகத்தை வெளிவி டாதே
துடியான பூரகத்தைப் பின்னி டாதே
வெல்வதென்ன கும்பகத்தை யடிவி டாதே
மேலேற்று மாத்திரையை மறந்தி டாதே
செல்வதென்ன கற்பத்தை மறந்தி டாதே
செந்தூரஞ் சேர்க்கையிலே சிதறி டாதே
கொல்வதென்ன அமூதயலேபிறக்கு மிந்தக்
குளிகைக்குச் சாரணைசெய் குணமு முற்றே.

1 எண்ணா யிரத்து லிருநூறு மந்திரம்
அண்ணார் சொன்னாரடியே னறிந்தேன்
சொன்னார் சிவப்புச் சோர்பச்சை ரூபம்
வண்ணா னறிவான் வகாரத் திரையமே

என்று திருமூலர் திருமந்திரத்திற் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ பாஸ்கர ராயர்

 

பாஸ்கர ராயர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாகா என்னும் ஊரில் கி.பி., 1690ல் பிறந்தார். தந்தையின் பெயர் கம்பீர ராயர். தாயாரின் பெயர் கோனாம்பிகா. விச்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் 1690 முதல் 1785 வரை இருக்கலாம் என்று உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். தந்தை கம்பீரராயர் பெரிய பண்டிதர். ஒழுக்க சீலர். சாஸ்திரங்களையும், புராணங்களையும் கரை கண்டவர். அவர் தமது திருக்குமாரனுக்கு இளவயதிலேயே சரஸ்வதி உபாசனை செய்து வைத்தார். பின்னர், காசிப் பட்டணத்திற்கு அவரை அழைத்துச் சென்று நரசிம்மானந்த நாதர் என்னும் பெரியாரிடம் வித்தியாப்பியாசத்திற்காக விட்டுவைத்தார். அவரிடம் தமது ஏழாவது வயதிற்குள்ளேயே சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். மகா வித்வானான சபேச்வரர் என்ற அரசரின் நன்மதிப்பைப் பெற்றார். பின்னர் கங்காதர வாஜ்பேயீ என்பவரிடம் கௌடதர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். அதிகமாகப் பழக்கத்திலில்லாத அதர்வண வேதத்தை முறையாகக் கற்றுக் கொண்டு பிறகு அதை சொல்லித் தந்தார். தேவி பாகவதத்தைப் பிரவசனம் செய்து அதன் புகழை ஓங்கச் செய்தார். பாஸ்கர ராயர் ஆனந்தி என்ற பெண்ணை மணந்து கொண்டார். தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு பாண்டுரங்கன் என்று பெயரிட்டார்.

இவருக்கு வித்யையை <உபதேசம் செய்து, பாஸுராநந்த நாதர் என்று தீட்சா நாமம் அளித்தவர் சிவதத்த சுக்லர் என்ற மகான். பின்னர் பாஸ்கரராயர் தம் மனைவி ஆனந்திக்கு வித்யையை உபதேசம் செய்து பத்மாவதி அம்பிகா என்ற தீட்சா நாமத்தை அளித்தார். கூர்ஜர தேசத்திற்குச் சென்று வல்லபாசாரிய மதத்தைச் சார்ந்த வித்வான் ஒருவரை வாதத்தில் வென்றார். அடுத்து மத்வ மதத்தைச் சார்ந்த பண்டிதர் ஒருவரையும் வெற்றி கண்டு, அவரது <உறவினர் பெண் பார்வதியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். காசியில் தங்கியிருந்தபோது இவர் பெரியதொரு சோமயாகம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் சந்திரசேனன் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி, கிருஷ்ணா நதிக்கரையில் சில காலம் வாழ்ந்து வந்தார். அதற்குப் பிறகு தஞ்சை மன்னர் இவரை அன்புடன் அழைக்கவே, தமிழகத்திற்கு வந்து குடியேறினார். இவரது குருவான கங்காதர வாஜ்பேயீ, அப்போது காவிரியின் தென்கரையில் <உள்ள திருவாலங்காட்டில் வசித்து வந்ததால் அவர் அருகிலேயே வாசம் செய்ய பாஸ்கரராயர் விரும்பியிருக்க வேண்டும். அதற்கிணங்க தஞ்சை மன்னரும், திருவாலங்காட்டுக்கு வடகரையில் உள்ள செழிப்பான கிராமத்தை மகானுக்கு அளித்திருக்கிறார். அது பின்னர் பாஸ்கரராஜபுரமாக மாறியிருக்கிறது.

பாஸ்கரராஜபுரத்தில் வெகுகாலம் வசித்து, அம்பாளின் உபாசனையில் திளைத்து, தமது இறுதிக்காலத்தை மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூரில் கழித்த பாஸ்கரராயர், அங்கு தமது 95-வது வயதில் தேவி சரணங்களை சென்றடைந்தார். அவர் காலத்திற்குப் பிறகு, அவரது துணைவியார் பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேச்வர் ஆலயத்தை நிர்மாணித்திருக்கிறார். இந்த ஆலயம் கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில் உள்ள  திருவாலங்காடு அருகே அமைந்துள்ளது. ஸ்ரீவித்யை உபாசகர்களில் தலைசிறந்தவரான பாஸ்கரராயர் அம்பாளின் வரப்பிரசாதத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறார். நமது சநாதன வைதீக மார்க்கத்தில் அசையாத பற்றுக் கொண்டிருந்தவர். குப்தவதீ என்னும் தமது சப்தசதீ வியாக்கியானத்தில் ஆதிசங்கர பகவானை வெகுவாகத் தோத்திரம் செய்துள்ளார். பாஸ்கரராயர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பல எழுதியுள்ளார் என்றும், அவற்றில் பெரும்பகுதி தற்போது கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். வேதாந்தம், மீமாம்ஸை, வியாகரணம், நியாயம், சந்தஸ், காவியம், சுருதி, ஸ்மிருதி, புராணம், தோத்திரங்கள், மந்திர சாஸ்திரம் முதலிய துறைகளில் இவர் இயற்றியுள்ள நூல்களை ஆராய்ந்தோர், இம்மகானுக்குத் தெரியாத வித்தையோ, சாஸ்திரமோ இல்லை என்று தீர்மானமாகச் சொல்கிறார்கள். மந்திர சாஸ்திர ரகசிய நுணுக்கங்கள் பற்றி அவர் அறியாதது ஒன்றுமேயில்லை. மந்திர சாஸ்திரத்திலேயே பதினேழு நுண்ணிய ஆராய்ச்சி நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இவற்றில் ஒன்றுதான் சௌபாக்ய பாஸ்கரம் என்ற லலிதா சகஸர நாமம் விளக்க உரை நூல். இவர் லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதியதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. ஒரு முறை இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் முன் நின்று லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார். இவர் பாராயணம் செய்ததை கேட்டு மகிழ்ந்த அம்பாள், இவர் முன் தோன்றி, இவருக்கு ஆசிர்வாதம் தந்து இதற்கு விளக்கவுரை எழுதும் படி கூறினாள். அம்மன் கூறியதை சிரமேற்கொண்ட பாஸ்கரராயர் திருக்கோடிக்காவல் என்ற கோயிலில் லலிதா சகஸ்ர நாமத்தின் விளக்க உரையை அரங்கேற்றி அதற்கு "சௌபாக்ய பாஸ்கரம் என்ற நாமம் சூட்டினார். அவர் இந்த பாஷ்யத்தைப் பன்னிரெண்டு பாகங்களாப் பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் சூரியனுடைய பன்னிரண்டு கலைகளின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கிறார். தமது பாஷ்யத்தின் முன்னுரை சுலோகம் ஒன்றில் பாஸ்கரராயர், கிழக்கில் பிரம்ம புத்திரா நதி ஓடும் காமரூபம் என்ற அஸ்ஸாம், மேற்கில் சிந்து நதி ஓடும் காந்தார தேசம், தெற்கில் ராமரால் கட்டப்பட்ட சேது, வடக்கில் பனி மூடிய கேதாரம், இவற்றுக்கு இடையே உள்ள பிரதேசத்தில் வாழும் வித்வான்களுக்கு இந்த எனது லலிதா சகஸ்ரநாம வியாக்யானம் மகிழ்ச்சியைத் தரட்டும் என்று கூறியுள்ளார்.

பாரதம் பெற்றெடுத்த மாமேதைகளில் ஒருவர் பாஸ்கரராயர். அவரது மகிமைகளை அறியும்போது, ஆதிசங்கர பகவத்பாதருக்கும், அப்பய்ய தீட்சிதருக்கும் அடுத்தபடியாக இந்த மகானை மதிப்பிடத் தோன்றும். வித்யையின் உட்பொருளையும், மந்திர சாஸ்திர ரகஸ்யங்களையும் மிக ஆழமாக அறிந்திருந்த இவருக்கு அடுத்தபடியாகச் சொல்ல வேண்டுமானால் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி முத்து சுவாமி தீட்சிதரைத்தான் குறிப்பிட வேண்டும். காசியிலிருந்தபோதே பாஸ்கரராயர் வாமாசர சம்பிரதாயப்படி தேவி உ<பாசனை செய்து வந்திருக்கிறார். இதை அங்குள்ள பண்டிதர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். அவரை அவமானப்படுத்த எண்ணம் கொண்டு, அவர் செய்த மகா யாகத்திற்குச் சென்று, மந்திர சாஸ்திர சம்பந்தமான கேள்விகளை சரளமாகக் கேட்டு அவரை மடக்கப் பார்த்தனர். ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பாஸ்கரராயர் சரியாக பதில் சொன்னார். அப்போது அங்கு இருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற மகான், பண்டிதர்களை நோக்கி, பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் அமர்ந்து விடையளித்து வருவதால் நீங்கள் தோற்பது நிச்சயம், பேசாமல் இருங்கள் என்று எச்சரித்தார். அப்போது நாராயண பட்டர் என்ற பண்டிதர், பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் பிரசன்னமாயிருப்பதைத் தரிசனம் பண்ணவேண்டும் என்று விரும்பவே பாஸ்கரராயர் காலையில் அம்பிகைக்குச் செய்த அபிஷேக நீரால் நாராயண பட்டரின் கண்களைத் துடைத்தார் குங்கும சுவாமி. அடுத்த கணம் பட்டரின் கண்களுக்கு, பாஸ்கரராயரின் தோளின் மீது அமர்ந்திருந்த பராசக்தி தரிசனம் அருளினாள். நாராயண பட்டர் பரவசத்தில் மூழ்கி, கண்ணீர் உகுத்தபடி, மகானின் காலில் விழுந்து வணங்கினார். இதர பண்டிதர்களும் அறியாமையால் செய்த தங்கள் தவற்றுக்கு பாஸ்கரராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.

பாஸ்கர ராயரின் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்ச்சியும் கூறப்படுவது உண்டு. அவர் திருவிடைமருதூர் மகாதானத் திண்ணையிலுள்ள தூணில் சாய்ந்து கொண்டு <உட்கார்ந்திருப்பது வழக்கம். அப்போது தினமும் வேப்பத்தூரிலிருந்து ஒரு சந்நியாசி அந்த இல்லத்தைக் கடந்து கொண்டு மகாலிங்கசுவாமி தரிசனத்திற்குப் போவார். ஆனால், பாஸ்கர ராயர் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யமாட்டார். இது அவ்வூர் மக்களுக்கு சற்று வியப்பை ஊட்டியது. சிலர் ஆத்திரமடைந்தார்கள். ஒருநாள் கோயிலில் பாஸ்கர ராயரும் அந்த சந்நியாசியும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர், துறவியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதற்கு பாஸ்கரராயரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது பாஸ்கரராயர், இல்லறத் தர்மத்தின்படி தாம் சந்நியாசிக்கு நமஸ்காரம் செய்திருந்தால், அவரது தலை சுக்கு நூறாக உடைந்திருக்கும் என்றும், அவரது உயிரை காப்பாற்றுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். பின்னர் அதை நிரூபிப்பதற்காக அத்துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் முதலியவற்றை ஓரிடத்தில் வைத்து அவற்றிற்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்தார். அடுத்த கணம் அவை மூன்றும் சுக்கு நூறாக உடைந்து சிதறின. அதைக் கண்டதும் அத்துறவி பாஸ்கரராயரின் மகிமையை உணர்ந்தார். பொது மக்களும் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.