Showing posts with label திருமூலர். Show all posts
Showing posts with label திருமூலர். Show all posts

திருமூல நாயனார்


ஞானம் -  20

அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி
அகாரமெனும் எழுத்த துவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலந் தன்னில்
முப்பொருளுந் தானாகி முதலு மாகிப்
படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்
படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி
அடியாகு மூலமதே அகார மாகி
அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே.
1
   
அதுவாகி அவனவளாய் எல்லா மாகி
அடிநடுவு முடிவாகி அகண்ட மாகிப்
பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம்
புகலிடமாய் எப்பொருட்கு மூல மாகி
மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி
மலராகி மணமாகி மதிக்க வொண்ணா
அதுவாகும் அகாரமதே மூல மாகி
அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம் மூல மாமே.
2
   
மூலமெனு மாதார வட்டந் தானே
முச்சுடரு முக்கோண மூன்று நாடிச்
சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந்
திருவடியுந் திருமேனி நடமு மாகும்
கோலமு டனண்டமெல்லாந் தாங்கிக் கொண்டு
கொழுந்து விட்ட கம்பமதாய் மேலே நோக்கி
ஆலமுண்ட கண்டெமலாந் தானாய் நின்ற
அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே.
3
   
அறிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்;
அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்;
பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்;
பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்;
அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை;
அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே.
4

 

நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை
நுண்பொருளாஞ் சிற்பரத்தி னூடே நோக்குந்
தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்
திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்
போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்;
ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே
அனுதினமும் நோக்கிநிற்பார் ஆசா னாமே.
5
   
ஆசானு மீசானு மொன்றே யாகும்
அவனவளு மொன்றாகும் அது தானாகும்;
பேசாத மந்திரமு மிதுவே யாகும்;
வேரொளியின் வடிவாகும்; பேரு மாகும்
நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்;
நிலையான ஓங்கார பீடமாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்கு
இன்பமுடன் கயிலாச மெய்த லாமே.
6
   
எய்தரிய பரமசிவத்தின் மூலந் தன்னில்
இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
எய்தரிய பரசிவத்தின் மூலந் தன்னில்
இருசுடரு முதித்தொடுங்கு மிடமேயென்று
மெய்தொழியுஞ் சுழுமுனையே கம்ப மாகி
மெய்ப்பொருளாஞ் சோதியென மேவி நிற்கும்;
இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை
இருநேர மற்றிடத்தே யிறைஞ்சிக் காணே.
7
   
காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்;
காணரிய பொருளாகுங் காட்டும் போதே
ஆண்பெண்ணாய் அலியாகி அடியு மாகி
அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் காணா
வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்
தேடரிய பாதமென்றே தெளிந்து நோக்கே.
8

 

தெளிவரிய பாதமது அகார மாகிச்
சிற்பரமுந் தற்பரமுந் தானே யாகி
அழிவரிய சோதியது தானே யாகி
அடிமுடிவு முடியாகி யமர்ந்து நின்று
மொழிவரிய முதலாகி மூல மாகி
முச்சுடருந் தானாகி முடிந்த சோதி
சுழியினிலே முனையாகிக் கோப மாகிச்
சொல்லரிய வெழுத்தென்றே தொகுத்துப் பாரீர்.
9
   
தொகுப்பதும் தாம் மந்திரங்கள் கருவி நூல்கள்
சொல்லரிய தத்துவங்கள் தம்மை யெல்லாம்
வகுத்துடனே யிவற்றையெலாங் கண்டு நீங்கி
வாகான உடலுயிரை வகையாற் கண்டு
பகுப்புடனே சேராமற் பாதந் தன்னைப்
பரகதிக்கு வழியனெவே பற்றிக் கொண்டு
விகற்பமிலா மூலமதில் நின்ற சோதி
மேலான பாதமென்றே மேவி நில்லே.
10
   
மேவியதோர் சற்குருவின் பாதந் தன்னை
மெய்ஞ்ஞான மென்றதனை மேவிக் கொண்டு
ஆவியுடல் காயமெல்லா மறிந்து பார்த்தே
அத்தனார் வடிவமென்றே அறிந்துகொண்டு
பாவனையு வானவெல்லாம் விட்டு நீங்கிப்
பகலிரவு மற்றிடத்தே கருத்தை வைத்துச்
சீவனையுஞ் சிவந்தனையும் ஒன்றாய்த் தானே
திருமூலர் பாதமொன்றித் திடமாய்க் காணே.
11

 

திருமூலரின் கற்பக மூலிகைகளின் பாடல்

 திருமூலரின் - 45 கற்பக மூலிகைகளின் பாடல்



திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும் 

  • “கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
    • கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
  • காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
    • 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
  • கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
    • 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
  • ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
    • ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா” (1)
  • “செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
    • 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
  • நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
    • நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
  • பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
    • பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
  • 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
    • மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே” (2)
  • “மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
    • 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
  • கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
    • 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
  • கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
    • கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
  • படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
    • 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே” (3)
  • “தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
    • தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
  • 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
    • ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
  • பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
    • பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
  • துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
    • சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே.” (4)
  • “சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
    • சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
  • மத்தான மன்மதன்போல் தேகமாகும்
    • மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
  • எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
    • ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
  • அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
    • அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே.” (5)

இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது மலைகளில்  எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது. விண்வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.