Showing posts with label SaanguSiddhar. Show all posts
Showing posts with label SaanguSiddhar. Show all posts

மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார்

மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார்| Magaan Saangu Siddha Sivalinga Nayanar| CHENNAI - LONDON 40 Min



சமையல்காரராக இருந்து சித்தரானவர் நாற்பது நிமிடத்துக்குள் சென்னையிலிருந்து லண்டன் சென்று அற்புதம் செய்தவர் “உன்னுள் உத்தமனை காணும் வழி சாகா கல்வி” என்று உலகத்திற்கு ஞான உபதேசம் அருளியவர். நவகண்ட யோகத்தில் வல்லவர் "மகான் ஸ்ரீ சாங்கு சித்த சிவலிங்க நாயனார் ஜீவ சமாதி - கிண்டி"

ஒவ்வொருவரும் தங்களை உணர வேண்டும். நான் யார்? என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்? அந்த ஆத்ம ஞானத்தை பெற செய்யவே சித்தர்கள் அற்புதங்களை நிகழ்த்தி காட்டினார்கள். அப்படித்தான் சென்னையில் வாழ்ந்த ஒரு சித்தர் நாற்பது நிமிடத்துக்குள் சென்னையிலிருந்து லண்டன் சென்று அற்புதம் செய்தார் நினைத்துப்பார்த்தால் வியப்பூட்டும் இந்த அற்புதத்தை செய்தவர் சாங்கு சித்த சிவலிங்க நாயனார். 

“உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி”
இதுவே நம்முடைய வினாவிற்கான பதிலுமாக இருக்கிறது.

சாங்கு என்றால் அதன் பொருள் என்ன?

அம்புகளில் பலவகைகள் உண்டு. அதில் சாங்கு என்கிற அம்பு மிக கூர்மையாக இருக்கும். ஏன்? என்ற கேள்வி. இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை. ஞானம் சம்பந்தமாக. நாம் பலவித கேள்வி கணைகளை தொடுக்க வேண்டும். அத்தகைய  கேள்வி களுக்கு  பிறர் மூலமாக பதில் கிடைக்கும். இல்லை சில சமயங்களில். நமது கேள்விகளுக்கு நமது ஆழ்மனமே பதிலை சொல்லும்.

 கேள்வி என்னும் அம்பை கொண்டு. ஞானம் என்னும் கனியை பரி. என்று இவர் தனது சீடர்களுக்கு பலமுறை உபதேசித்து உள்ளார். இவரது கருத்துக்களும், அறிவும். சாங்கு என்கிற அந்த அம்பை போல் கூர்மையாக இருக்கும் என்பதால் அப்பெயர் .

சாங்கு சித்தன் என்றால். குருவின் உபதேசத்தை பெற விரும்புபவர் என்றும் அர்த்தம். சாங்கு சித்தர். சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்தாலும். தான் மேலும், மேலும் பல விசயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார். அதனாலும் இவருக்கு இப்பெயர் வந்து இருக்கலாம். போன்ற பல காரணங்கள் இருந்தாலும். உண்மையில் இவர் கபில முனிவர் வகுத்த சாங்கியம் என்கிற தத்துவத்தை பின்பற்றினார் என்பதாலேயே இந்த பெயர் இவருக்கு வந்து இருக்கும்.

சாங்கியம் இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியான தத்துவம் ஆகும். உலக படைப்பு மற்றும் சீவராசிகளின் தோற்றம் குறித்து சாங்கிய தத்துவம் சொல்கிறது.

சாங்கிய தத்துவங்களையே ஞான யோகம் என்கிற பெயரில் கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லி இருக்கிறார். கபில முனிவர். வியாசர் போல் விஷ்ணுவின் அம்சமானவர் என்று வைஷ்ணவ நூல்கள் சொல்கின்றன. புத்த மத சிந்தனையில் கூட சாங்கியம் அதிகம் இடம் பெறுகிறது.


#SaanguSiddhar  #சாங்குசித்தர் #SithargalinRajiyam #ஜீவசமாதி #SANGUSIDDHAR  #JeevaSamadhi   #சித்தர்களின்_ராஜ்ஜியம் #சித்தம்டிவி #SithamTV #Sithargalinrajiyam  #சித்தர்கள் #ராஜ்ஜியம் @சித்தர்களின் ராஜ்ஜியம்   #Sangu #Siddhar #Guindy #Siddhar #Thatha #Siddhar #நவகண்ட #யோகம்