அன்னாபிஷேகம்

திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். 

அது மலையல்ல, மருந்து. பிறவிப்பிணி தீர்க்கும் பெருமருந்து. அலையாட்டம் போடும் அகத்துக்கு அமைதித்தரும் அருமருந்து. அதுவே திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை. நான் என்ற அகந்தை அழிந்த தலம்.

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் வழமை இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது. 

எட்டு திக்கிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம். தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு.

மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய,சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்......) உச்சரிக்க வேண்டும் , அதை தவிர்த்து வேற எதையும் பேசக்கூடாது. கிரிவலம் செல்லும்போது நிதானமாக நடக்க வேண்டும், அவசரமாகவோ, வேகமாகவோ அல்லாத மற்றவர்களை இடித்து கொண்டு செல்லக் கூடாது. 

இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களை பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார். இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.

பல்வேறு நகரங்களிலிருந்தும், ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன. 


#திருவண்ணாமலை #SithamTV #சித்தம்டிவி  

ஏரி காத்த ராமர் திருக்கோவில்

 ஏரிகாத்த ராமர்  | ERI KATHA RAMAR TEMPLE MYSTERY -  MADURANTAKAM

உண்மையில் கடவுளை காண முடியுமா..? அப்படி கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா..? என்ற கேள்விக்கு, ஆமாம், இருக்கிறார் என்பது பதிலாக உள்ளது. அவர் கடவுளை கண்ட சம்பவத்தை, கல்வெட்டில் பதிவாகவும் அமைத்திருக்கிறார்கள். இது 1825-ம் ஆண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் செங்கல்பட்டு கலெக்டராக இருந்த கர்னல் லியோனல் பிளேஸ் என்பவருக்கு நடந்தது.

ஒரு முரை தொடர்ச்சியான மழை காரணமாக ஏரி விரைவாக நிரம்பியது. அதிகப்படியான நீர் நிரம்பிய காரணத்தால் இன்னும் சில தினங்களில் கரைகள் உடைய வாய்ப்புள்ளதாக செய்தி பரவியது. அவ்வாறு கரை உடைந்தால் வெள்ள நீர் ஊருக்குள் வருவதோடு, விளை நிலங்களும் பாதிக்கப்படலாம் என்ற பயம் மக்கள் மத்தியில் நிலவியது. அப்போதைய கலெக்டர் என்ற நிலையில் லியோனல் பிளேஸ் ஏரியின் கரையை பலப்படுத்த முயற்சி எடுக்க வேண்டி அந்த பகுதிக்கு வருகை புரிந்தார்.

அடுத்த ஓரிரு நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகமாகிவிட்டது. அந்த சமயத்தில் ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் மழை அதி தீவிரமாக பெய்யும் நிலையில், நிச்சயம் ஏரியின் கரை உடைந்து விடும் என்று நினைத்த அவர், நிலைமையை நேரில் சென்று பார்த்து, மேலதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று, தனி ஆளாகவே கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கி துணிச்சலுடன் சென்றார்.

சற்று நேரம் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு மின்னல் தோன்றியது.   அந்த மின்னல் வெளிச்சத்தில் அவரது கண்களில் அந்த காட்சி தெரிந்தது. அங்குள்ள ஏரியின் கரை மீது உயரமான இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகம் அந்த மின்னல் ஒளியில் அழகாக தென்பட்டது. இருவர் கைகளிலும் வில், அம்பு வைத்திருந்தார்கள். ஏரியை உற்று நோக்கியவாறே, எதிரும் புதிருமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு சில கணங்கள் மட்டுமே அந்தக் காட்சியை கண்டார். 

மறுநாள் பொழுது புலர்ந்தது. வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் அவ்வளவாக தென்படாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது, ஏரிக்கு சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த ஆங்கிலேய அதிகாரி நடந்த சம்பவத்தை மக்களுக்கு ஆச்சரியத்துடன் சொன்னார். அவர் சொன்னபடி ஜனகவல்லி தாயாருக்கு சன்னிதியை புதிதாக அமைத்து கொடுத்ததுடன், பல திருப்பணிகளையும் அந்த ஆலயத்திற்கு செய்தார்.  நடந்த சம்பவம் அந்த ஆலய கல்வெட்டிலும் பதிவு செய்து வைக்கப்பட்டது.

1600 ஆண்டுகள் தென்னிந்தியாவின் பழமையான பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் | Eri-Katha Ramar Temple

Sri Yeri Katha Raamar Temple is a Hindu temple dedicated to Lord Rama located in the town of Maduranthakam, Tamil Nadu, India.This is the sthalam (place) where Udayavar (the presiding deity) was named Ramanuja. The temple is also known by other names such as - Mathuranthaka Chaturvedi Mangalam, Vaikunda Varthanam, Thirumathurai, Thirumanthira Tirupathi, Karunagara Vilagam. Thirumalisai Alvar attained siddhi (enlightenment) in this sthalam (place). Also, Sri Ramanujar was instructed the Pancha Samskara Mantram at this place.





#erikatharamartemple #ஏரிகாத்தராமர்கோவில் #SithargalinRajiyam #RamaNavami #EriKathaRamar #SitaRama #மதுராந்தகம்ஏரிகாத்தராமர்கோயில் #ராமர்கோவில் #EriKathaRamarTemple #அயோத்திரமர்கோவில் #EriKathaRaamarTemple #KodandaramarTemple #Maduranthakam #ஏரிகாத்தராமர்கோவில் #EriKathaRamar #MadurantagamRamarTemple

ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் பெருங்களத்தூர்

ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் | Sadhananda Swamigal Ashram | Alapakkam | Sadhanandapuram | Perungalathur 

உலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவும்,அறிவு ஒளி பெருகவும்,ஆன்ம ஒளி நல்கிடவும் சித்தர்களும்,மகான்களும் அவ்வப்போது தோன்றி மக்களை வழி நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இந்த புண்ணிய பூமியாம் தமிழ் நாட்டிலே பிறந்ததற்கு நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். ஓரளவேனும் புண்ணியம் இருந்தால் தான் நாம் தென்னாட்டிலே பிறக்க முடியும். அப்படி பிறந்த நாம், வாழ்கின்ற நாட்களில் சித்தர்கள்,மகான்கள் பற்றியும்,அவர்களது அருளாசி பற்றியும் அறிந்து இருளகற்றி , அறிவு ஒளி பெருக்கிட வேண்டும்.

சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறத்திலுள்ள சித்தர்கள் மற்றும் மகான்கள் வரிசையில் இவருக்கு தனி இடம் உண்டு.சொல்ல சொல்ல இனிக்குதடா என்பதற்கேற்ப இந்த சித்தரின் பெயரை சொல்ல சொல்ல நம்மிடம் குரு பக்தி உயரும். தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும். 


#சதானந்தசுவாமிகள் #SithargalinRajiyam #SadhanandaSwamigal #Swamigal #சித்தர்களின்_ராஜ்ஜியம் #JeevaSamadhi #18Siddhars #KannappaSwamigal #SattiSamiyar #SattiSamigal #SiddhargalThiruvadi #Siddhargal #Kaavangarai #jeevasamathi #JeevaSamathiChennai #SiddhargalJeevaPeedam #LivingSiddhars #SiddhaRagasiyam #SiddhargalThiruvadi #SiddhargalGuruPoojai #JeevaSamadhi #சொரூபசித்து #சித்தர்கள்அறிவோம் #நவகண்டயோகி #SRI #Sadhananda #Swamigal #Ashram #ஸ்ரீ #சதானந்த #சுவாமிகள் #SITHARGAL #siddhargal #jeevasamadhi #ஜீவசமாதி #சதானந்தசாமிகள் #சித்தர்களின்ஜீவசமாதி #பெருங்களத்தூர் #சித்தர்கள் Sadananda Swamigal Ashram Alapakkam perungalathur #SiddhargalJeevaPeedam #LivingSiddhars #SiddhaRagasiyam #GunnuChannel #SiddhargalGuruPoojai #JeevaSamadhi Sadhanandapuram #SadhanandhaSwamigal #SiddharSadhanandhar #Sadhananthapuram #ChennaiSiddhars #VandalurSiddhar #SrimathSathanandhaSwamy #SiddhargalJeevaPeedam #LivingSiddhars #SiddhargalThiruvadi #Siddhargal #SiddhargalUlagam #SiddhargalDesam #SiddhargalUgam #SiddhargalBoomi #SiddhaRagasiyam

மகான் பாடகச்சேரி சுவாமிகள்

மகான் பாடகச்சேரி சுவாமிகள் எனும் ஶ்ரீ  இராமலிலிங்க சுவாமிகள் | பைரவர் சித்தர் | Padagacheri Ramalinga Swamigal 


பாடகச்சேரி சுவாமிகள் யோகங்களைக் கற்றவர். இறைப் பணிகளை மேற்கொண்டவர், பலருடைய பிணிகளைத் துரத்தியவர். இறந்ததாக் கருதப்பட்ட சிலரை உயிர்ப்பித்துப் பிறரை ஆச்சரியப்பட வைத்தவர், இவரது ஜீவன் இன்று சென்னை திருவொற்றியூரிலே ஐக்கியம் ஆகி இருந்தாலும், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இவர் உருவாக்கிய பாதாள அறையிலும் ஜீவன் இருப்பதாக சுவாமிகளே அருளி இருக்கிறார்கள் என்கிறார்கள் அவரின் பக்தர்கள். ஜீவ சமாதி என்பது ஓர் அடையாளம்தான்! மானுட ஜீவனா அது ஓர் இடத்தில் மட்டும் அடங்கிக் கிடப்பதற்கு? எங்கும் நிறைந்திருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். இன்றைக்கும் தன் பக்தர்கள் எவருக்கு ஒரு துயர் வந்தாலும், விரைந்தோடி வந்து அதைக் களைகிறார்.

வடலூர் வள்ளலாரின் சிஷ்ய பரம்பரை நான் என்று சொல்லிக்கொள்ளும் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் தன் பக்தர்களுக்கு அருளிய மொழி என்ன தெரியுமா?

நான் மறைந்தாலும், என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்!

இன்றுவரை தன் பக்தர்களுக்கு ஆசியும் அருளும் வழங்கித் கொண்டுதான் இருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். அந்த மகானின் திருவடி தொழுவோம்! தரிசனம் பெறுவோம். 


#பாடகச்சேரிசுவாமிகள் #SithargalinRajiyam #இராமலிலிங்கசுவாமிகள் மகான் ஸ்ரீ ல ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் #குருபூஜை #கிண்டி #பாடகச்சேரி #PadagacheriRamalingaSwamigal Padagachery #sidhargal #padagacheri #ramalingam #sidhar #jeevasamathi #பாடகச்சேரி #மகான்பைரவசித்தர் #பாடகச்சேரிஇராமலிங்கசுவாமிகள் #SithargalinRagasiyangal #Guindy #PadagacheriRamalingaSwamigal #பாடகச்சேரிஇராமலிங்கசாமிகள் #padagacheriramalingaswamigal #padagacheriramalingasiddhar #tiruvottiyursiddhar #பாடகச்சேரிராமலிங்க #jeevasamadhi