மகான் பாடகச்சேரி சுவாமிகள் எனும் ஶ்ரீ இராமலிலிங்க சுவாமிகள் | பைரவர் சித்தர் | Padagacheri Ramalinga Swamigal
பாடகச்சேரி சுவாமிகள் யோகங்களைக் கற்றவர். இறைப் பணிகளை மேற்கொண்டவர், பலருடைய பிணிகளைத் துரத்தியவர். இறந்ததாக் கருதப்பட்ட சிலரை உயிர்ப்பித்துப் பிறரை ஆச்சரியப்பட வைத்தவர், இவரது ஜீவன் இன்று சென்னை திருவொற்றியூரிலே ஐக்கியம் ஆகி இருந்தாலும், கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபத்தில் இவர் உருவாக்கிய பாதாள அறையிலும் ஜீவன் இருப்பதாக சுவாமிகளே அருளி இருக்கிறார்கள் என்கிறார்கள் அவரின் பக்தர்கள். ஜீவ சமாதி என்பது ஓர் அடையாளம்தான்! மானுட ஜீவனா அது ஓர் இடத்தில் மட்டும் அடங்கிக் கிடப்பதற்கு? எங்கும் நிறைந்திருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். இன்றைக்கும் தன் பக்தர்கள் எவருக்கு ஒரு துயர் வந்தாலும், விரைந்தோடி வந்து அதைக் களைகிறார்.
வடலூர் வள்ளலாரின் சிஷ்ய பரம்பரை நான் என்று சொல்லிக்கொள்ளும் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் தன் பக்தர்களுக்கு அருளிய மொழி என்ன தெரியுமா?
நான் மறைந்தாலும், என்னை நம்பி இருப்பவர்களுக்கு நான் என்றும் துணையாக இருப்பேன். என்னை நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை வரும் பொருட்டு உதவிகள் செய்து வருவேன்!
இன்றுவரை தன் பக்தர்களுக்கு ஆசியும் அருளும் வழங்கித் கொண்டுதான் இருக்கிறார் பாடகச்சேரி சுவாமிகள். அந்த மகானின் திருவடி தொழுவோம்! தரிசனம் பெறுவோம்.
#பாடகச்சேரிசுவாமிகள் #SithargalinRajiyam #இராமலிலிங்கசுவாமிகள் மகான் ஸ்ரீ ல ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் #குருபூஜை #கிண்டி #பாடகச்சேரி #PadagacheriRamalingaSwamigal Padagachery #sidhargal #padagacheri #ramalingam #sidhar #jeevasamathi #பாடகச்சேரி #மகான்பைரவசித்தர் #பாடகச்சேரிஇராமலிங்கசுவாமிகள் #SithargalinRagasiyangal #Guindy #PadagacheriRamalingaSwamigal #பாடகச்சேரிஇராமலிங்கசாமிகள் #padagacheriramalingaswamigal #padagacheriramalingasiddhar #tiruvottiyursiddhar #பாடகச்சேரிராமலிங்க #jeevasamadhi
No comments:
Post a Comment