கோம்பைச் சித்தர் ஜீவசமாதி | SRI KOMBAI SIDDHAR JEEVASAMADHI
கோம்பை சுவாமிகள் ஜீவசமாதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடமாடி அருளாட்சி புரிந்த சித்தர் பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவாராக விளங்கியவரும் கோம்பை சுவாமிகளும் ஒருவர், மதுரை மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள கோம்பை எனும் ஊரில் பிறந்ததால் சுவாமிகள் கோம்பை சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.
கோம்பையின் ஜமின்தாராக விளங்கிய சம்தவாய் என்பவருக்கு மகனாகத் தோன்றிய சுவாமிகளின் இயற்பெயர் வேல்தளவாய் என்பதாகும் இளமையிலேயே வீட்டை விட்டு வெளியேறி பரஞானம் தேடிப்புறப்பட்ட சுவாமிகள் பாரதத்தின் பல பகுதிகளுக்கும் சென்று அருட்செயல் நிகழ்த்திய கலாமிகள் கி பி 1865 ஆம் ஆண்டு நாகர்கோவில் வடசேரிக்கு எழுந்தருளினார்கள்.
எல்லோருடைய வணக்கத்திற்கும் உரியவராக விளங்கிய சுவாமிகள் 18-2-1925 அன்று புதன்கிழமை இரவு சுமார் 8.00 மணிக்கு ஏகாதசி திதியில் அண்மையில் யாருமில்லாத சமயத்தில் தம் இகிலோக வாழ்வை நீத்து சமாதி அடைந்தார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து அடியவர்கள் திரளாகக் கூடினர். சமாதிச்சடங்குகள் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கேரளாவில் ஆரண்முளையைச் சேர்ந்த தவத்திரு சுவாமி சுயம்பர்ணானந்தா ஈத்தா மொழி வந்து சேர்ந்தார். அவரது முன்னிலையில் மகாசமாதி சடங்குகள் சிறப்பாக நடந்தன. இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும், நாட்டின் பல பாகங்களிருந்தும் பக்தர்கள் அங்கு வந்து வணங்கி, அருள் பெற்றுச் செல்கின்றனர்.
No comments:
Post a Comment