ஸ்ரீ அப்பரானந்தா சித்தர் முருகப்பெருமானோடு பேசியவர் நாகத்தின் காவலில் தவம் செய்தவர் || NETTUR APARANANTHAR SITTHAR
இவ்வூரில்தான் மிகப்பெரிய அதிசய அருள் சக்தி குடிகொண்டுள்ளது. ஆம்.. அகத்தியப் பெருமானுக்கே தமிழ் கற்றுக்கொடுத்த முருகப்பெருமான் சன்னிதிக்குள், அப்பரானந்தா சுவாமி சமாதி அமைந்திருக்கிறது. இது எங்குமே காணக்கிடைக்காத அற்புதத் தரிசனம். குருவின் மூலஸ்தானம் அருகே சமாதி நிலை யாருக்கு கிடைக்கும்?. அப்படி கிடைத்திருக்கிறது என்றால் இவர் எவ்வளவு பெரிய மகானாக திகழ்ந்திருக்கிறார் என்பது புலப்படும்.
யார் இந்த அப்பரானந்தா சுவாமிகள்?. இவர் எங்கிருந்து இவ்வூருக்கு வந்தார்?
நெட்டூர் சித்தர் அப்பரானந்தர் சுவாமிகள்
தான் முக்தியடையும் காலத்தை மன்னன் வெள்ளப் பாண்டியனுக்கும் மற்றவர்க்கும் சொல்லியனுப்பினார்.
சுவாமிகள் தாம் சொல்லியபடியே ஆனி மாதம் வியாழக்கிழமை பூச நட்சத்திரத்தில் பரிபூரண மெய்தினார். சமாதி கோயில் அமைந்துள்ள இடம்: தென்காசி திருநெல்வேலி பேருந்து வழித்தடத்தில் உள்ளது ஆலங்குளம். ஆலங்குளத்திற்கு வடக்கே செல்லும் சாலையில் ஏறத்தாழ 8 கி.மீ. தொலைவில் சித்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது சமாதிக் கோயில். நெட்டூர் கிராமம். அவ்வூரின் நடுவே அமைந்துள்ளது சமாதிக் கோயில். கருவறையில் முருகன் பிரதிஷ்டை ஆகியுள்ளார். அர்த்த மண்டபத்தில் சுவாமிக்கு முன் இடப்பாகத்தில் சித்தரின் சமாதி. சமாதியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது ஆலங்குளம். இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் அழகிய பாண்டிய புரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை, சோழச்சேரி வழியாக 10 கிலோமீட்டர் தொலைவிலும் நெட்டூர் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன..
siddhar apprananthar swamy, His temple situated at Tirunelveli District, Nettur village, Alangulam.
No comments:
Post a Comment